Saturday, October 14, 2017

அமெரிக்காவை வெளியேற்றிய டிரினிடாட் அண்ட் டுபாக்கோ

 சோகத்தில் அமெரிக்க வீரர்
உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதை ஒரு கெளரவமாக  உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கருதுகின்றன. உலகை அச்சுறுத்தும் நடன அமெரிக்கா  மிகச்சிறிய நாடான டிரினிடாட் அண்ட் டுபாக்கோவிடம் தோல்வியடைந்ததால் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை இழந்தது.

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்டப்      போட்டித் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளுக்கான பிரிவில் மொத்தம் 35 அணிகள் விளையாடின. 4 சுற்றுகளின் முடிவில் மெக்சகோ, கோஸ்டா ரிகா, பனாமா, ஹோண்டுராஸ், அமெரிக்கா, டிரினிடாட் அண்ட் டுபாக்கோ ஆகிய 6 அணிகள் ரவுண்ட் ராபின் சுற்றுக்கு முன்னேறின.

இதில் இருந்து 3 அணிகள் மட்டுமே  உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறும் என்பதால் இந்த அணிகளுக்கிடையே போட்டி கடுமையாக இருந்தது.

ரவுண்ட் ராபின் சுற்றில் மிக முக்கியமான ஆட்டத்தில் அமெரிக்காவும் டிரினிடாட் அண்ட் டுபாக்கோவும் செவ்வாய்க்கிழமை இரவு மோதின. இதில் அமெரிக்கா 2-1 என தோல்வி அடைந்தது. அதேசமயம், ஹோண்டுராஸ், பனாமா அணிகள் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றன.

எனவே, புள்ளி பட்டியலில் அமெரிக்கா 5-வது இடத்திற்கு பின்தங்கியதால்  உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில்விளையாடும்  வாய்ப்பு பறிபோனது. இந்த பிரிவில் இருந்து கோஸ்டா ரிகா, மெக்சிகோ, பனாமா ஆகிய அணிகள்  உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன.


1986-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அமெரிக்க அணி  உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளது.

No comments: