Tuesday, December 1, 2015

தமிழக மக்களின் வெறுப்பும் அரசியல் தலைவர்களின் விருப்பும்


தமிழக சட்டசபைத்  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில்  அரசியல் கட்சிகள் அனைத்தும் அறிவிக்கப்படாத தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டன. தேர்தல் போட்டியில் முன்னிலையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு இயற்கை சதி செய்கிறது. வரலாறு காணாத வெள்ளம் ஆளும் கட்சியின்மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  தமிழக அரசின் மந்தகதியிலான நிவாரணமும் எதிர்க்காட்சிகளின் சுறுசுறுப்பும் மக்களை சிந்திக்கத் தூண்டி உள்ளது. தமிழக அரசின் நான்கரை ஆண்டு கால ஆட்சியை மக்கள் எடைபோடத் தொடங்கி  உள்ளனர்.
1991, 2001, 2002, 2011, 2015 ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வர் அரியணையில் வீற்றிருந்தார்.அவர் முதல்வராக இருக்கும் போது சர்வ அதிகாரங்களையும் கையில் எடுத்து சர்வாதியாகவே வீற்றிருந்தார். ஒவ்வொரு முறையும் அவர் தப்பு செய்யும் போது தூக்கி எறி யும்    தமிழக மக்கள் அடுத்த தேர்தலில் அவரை முதல்வராக்கி  அழகு பார்த்தனர். ஒருமுறை தண்டிக்கும்   தமிழக வாக்காளர்கள் அடுத்தமுறை மன்னித்து வாழ்வு கொடுத்தனர்.. கருணா நிதியையும்  இதே போன்றுதான்    தமிழக மக்கள் அரியணையில் ஏற்றி இறக்குகின்றனர். இதனால் கருணாநிதி சற்று தெம்பாக இருக்கின்றார். அனால், தமிழக அரசியல் தலைவர்கள்  அவரின் கையை பற்றிப்பிடிக்க மறுக்கின்றனர். இது ஜெயலலிதாவுக்கு  சாதகமாக உள்ளது. ஜெயலலிதாவின் ஆட்சிமீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். மக்களின் வெறுப்பை  வெற்றியாக்க வேண்டும் என கருணாநிதி துடிக்கிறார்.
2 ஜி ஊழல் ,மின்வெட்டு ஆகியன காரணமாக திராவிட முன்நீர்ரக் கழகம் ஆட்சியை இழந்தது. தடை இல்லா மின்சாரம் தருவேன் என உறுதியளித்த ஜெயலலிதாவால் அதனை இன்று வரை நிறைவேற்ற முடியவில்லை. தேர்தல்  காலத்தில் ஆட்சிபீடம் ஏறுவதற்காக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் கலந்துவிட்டன. அரசியல் பழிவாங்கல்கள் தாராளமாக நடைபெற்றன. அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டடம் செய்தவர்கள் அடக்கப்பட்டனர். ஆட்சியாளர்களின் அராஜகத்துக்கு காவல்துறை துணைபோனது.

அனல்மின்சாரம்,காற்றலை மின்சாரம்,சஊரிய ஒலிமின்சாரம் என்பனவற்றின் மூலம் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்குவேன் என தேர்தல் சமயத்தில் ஜெயலலிதா உறுதியளித்தார்.கருணாநிதியின் ஆட்சியில் நடைப்பெற்ற மின்வெட்டு ஜெயலலிதாவின் ஆட்சியிலும் தொடர்கிறது. மின்வெட்டை இல்லாமல் செய்வதற்கான எந்தவித முயற்சியையும் ஜெயலலிதா முன்னெடுக்கவில்லை. 
 ஜெயலலிதாவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின்பதவி எப்போ  பறிமுதலாகும் எனத்தெரியாது.   அமைச்சுப் பதவி நிரந்தரமானதில்லை என அரசியல் தெரியாதவர்கள்கூட அடித்துக் கூறுவார்கள். முன்னாள் அமைச்சர்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.  இதுவரை  24  முறை அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது.
அவர்களில் 11 மட்டும்தான் தொடர்ந்தும் அமைச்சர்களாக உள்ளனர்.ஏனையோரின் பதவி பலவித குற்றச்சாட்டுகளால் பறிக்கப்பட்டது. பின்னர் குற்றச்சாட்டுகலில் இருந்து அவர்கள் விடுவிக்கப்படாமலே மீண்டும்  பதவி வழங்கப்பட்டது. அமைச்சர்கள் கொத்தடிமைபோல்  நடத்தபோபடுகிறார்கள்.அமைச்சுப் பதவி கிடைப்பதனால்  தலையாட்டி பொம்மைகளாகவே அவர்கள் வலம் வருகிறார்கள். ஜெயலலிதாவின் புகழ் பாடுவதிலேயே  அமைச்சர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
தமிழகத்தின் சஞ்சிகையான ஜுனியர் விகடன் நடத்திய கருத்துக் கணிப்பில் ஜெயலலிதாவின் செல்வாக்கு சரிந்துள்ளது.ஜெயலலிதாவின் செயற்பாடு மோசம் என athikamaano தெரிவித்துள்ளனர். அவரத்க்ஹு செயற்பாடு சுமார் என அதிகமானோர் குஉரி உள்ளனர். தேர்தல் சமயத்தில் சுமார் ஏனஸ் சொன்னவர்கள் அவருக்கு எதிராகத்திரும்பிவிடலாம். அதற்கிடையில் ஜெயலலிதாவின் செயற்பாடு எப்படி இருக்கிறது என்பதை வாக்காளர்கள் உன்னிப்பாக அவதானிப்பார்கள். கருத்துக்கணிப்புக்கு எதிராக ஜெயலலிதா வழக்கு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ர்டம் செல்வது அவருக்கு அல்வா சாப்பிடுவதுபோல் விருப்பமானது.
தமிழகத்த்தின் எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் இருக்கிறார். ஆனால் அவர் எதிர்கட்சித் தலிவர்பூல் செயற்படுவதில்லை என 90 சதவீதமாநூர் கருத்துத் தெரிவித்துள்ளனர். வெறும் 10  சதவீதமானவர்கள் மட்டும்தான் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக அரசியலைப்பற்றி  தெரியாதவர்கள் அல்லது விஜயகாந்தின் விசுவாசிகள்தான்  அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.எதிர்க்கட்சித் தலைவராக செயற்படமுடியாத ஒருவர் எப்படி முதலமைச்சராக பதவி வகிப்பார் என மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டனர். இதேவேளை விஜயகாந்தின் வாக்கு வங்கியும் சரிந்துள்ளது. ஆனாலும் தனக்கு அதிகமான தொகுதிகள் வேண்டும் என்பதில்  அவர் விடாப்பிடியாக உள்ளார். க்ளடந்த சட்டசபைத் தேர்தலின் பூத்து வெற்றிபெற்ற அவரிக் கட்சி அங்கத்தவர்கள் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.  இது விஜயகாந்தின் அரசியலில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
திராவிட முன்னேற்ற‌க் கழகத்தின்  வெள்ள  நிவாரண நிதியை தமிழக அரசு ஏற்க மறுத்தது தற்போது சஊடான அரசியலாக உள்ளது.  சுனாமி தாக்குதலின் போது  திராவிட முன்னேற்ற‌க் கழகம்  வழங்கிய நிவாரனநிதியை  அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஸ்டாலினிடம் பெற்றார். இனறு ஸ்டாலினிடம் இருந்து நிவாரண நிதியைப்பெற நீரம் ஒதுக்காது இழுத்தடிக்கப்பட்டது மக்களுக்கு தேவையான தேவையான் உதவிகளையும் தான் மட்டுமே  செய்யவேண்டும் என்பதே ஜெயலலிதாவின் விருப்பம்.


 இந்தியாவின் முன்னிலை மாநிலமாக தமிழகத்தை உயர்த்துவீன் என உறுதிமொழி குஉரி ஆட்சியைப்பிடித்த ஜெயலலிதா, அந்த உறுதிமொழியை  காற்றில் பறக்கவிட்டார்.  அவருக்கு எதிரான  சொத்துக்குவிப்பு வழகில் இருந்து எப்படி வெளியே வருவது என்பதில் அதிக கவனம் எடுத்தார். மக்கள் பிரச்சினைகளில் மூழ்கி இருக்க கொடநாட்டில் ஓய்வெடுத்தார். வெள்ளத்தால் மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கையிலும் அவர் கொடநாட்டில் ஓய்வெடுத்தார். எதிர்க்கட்சிகளும்  ஊடகங்களும்  கேள்வி எழுப்பியதனால் கொடநாட்டில் இருந்து சென்னைக்குத் திரும்பினார்.
கருணாநிதி அருமுகப்படுத்திய திட்டங்களை இடைநிறுத்திவிட்டு அதே திட்டங்களை வீருபெயரில் தனது திட்டம் போல் அறிமுகப்படுத்தினார். கருணாநிதியின்  மெட்ரோ ரயில் திட்டத்தை  மோனோ ரயில் திட்டம் என அறிமுகப்படுத்தினார். புதிய தலைமைச்செயலகத்தை கைவிட்டு பழைய் தலைமைச்செயலகத்தில் சட்டசபையை  நடத்துகிறார். பலகூடி றுபாவில கட்டப்பட்ப்ட புதிய தளமைஸ் செயலகத்தை வைத்திய சாலையாக மாற்றியுள்ளார். கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தில் கால் வைக்க மாட்டேன் என்ற சபதத்தை  நிறைவேறினார்.  புதிய தலைமைச்செயலகம் கட்டியதில் ஊழல் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டிய ஜெயலலிதா அதற்கான ஆதாரங்களை இன்றுவரை வெளியிடவில்லை.
ஜெயலலிதாவுக்கு எதிரான மனநிலையில் தமிழ மக்கள் உள்ளனர்.  அவரை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்குஅவர்கள் தயாராக உள்ளனர். தமிழக அரசியல் தலைவர்கள் சிலரின் செயற்பாடு அதற்கு இடைஞ்ச்சளாக உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்தை  ஆட்சியில் இருந்து அகற்றும் வல்லமை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மட்டுமே உள்ளது. இந்த உண்மையைப் புரிந்து கொண்டும் ஜெயலலிதா வெற்றி பெறுவதற்குரிய வழிவகைகளைஈ அவர்கள் செய்கிறார்கள்.
தேர்தல் தேதியை இன்னும் குறிக்கவே இல்லை. அதற்குள்,  தேர்தல்  களேபரம் தொடங்கிவிட்டது. நமக்கு நாமே’, ‘முடியட்டும்... விடியட்டும்!என தமிழகம் முழுவதும் முதல்கட்ட  பிரசாரத்தை முடித்துவிட்டார் ஸ்டாலின், ‘விஷன் - 234’ என இலக்கு நிர்ணயித்து ஒளிரும் நிகழ்காலம்... மிளிரும் வருங்காலம்!’, ‘தழைக்கட்டும் தமிழகம்... செழிக்கட்டும் தமிழர்கள்!’, ‘தொடரட்டும் மேம்பாடு... ஜொலிக்கட்டும் தமிழ்நாடு!என அடுத்தடுத்த பிரசாரங்களைத் தொடங்கிவிட்டது அண்ணா திராவிட முன்னேற்றக் .கழகம் . மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி!’, ‘ஒரு சொட்டு மது இல்லாத  ஊழல் இல்லாத தமிழகம்!எனச் சொல்லி தேர்தல் அறிக்கை எல்லாம் வெளியிட்டு அன்புமணி ஒரு பக்கம் தோள் தட்டுகிறார். இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள்,   வைகோ தலைமையில் மக்கள் நலக் கூட்டணிகுறைந்தபட்ச செயல் திட்டத்தை எல்லாம் வெளியிட்டுத் தேர்தலுக்குத் தயாராகி நிற்கிறது. காங்கிரஸ் தயவில் கூட்டணி ஆட்சி அமையும்என திரிகொளுத்திப் போட்டு வருகிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். தமிழ் மாநில காங்கிரஸ் மதில் மேல் பூனையாக உள்ளது. நாம் தமிழர் கட்சியும், காந்திய மக்கள் இயக்கமும் சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இப்படி தேர்தல் களம் தயாராகிக் கொண்டிருக்கிறது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தேர்தல் களம்  சூடாகி  விடும்.வாக்காளர்கள் தெளிவான முடிவை எடுக்கத் தயாராகிவிடுவார்கள். அவர்களின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட தலைவர்கள் வெற்றி பெறுவார்கள்.
ரமணி 



No comments: