Monday, May 4, 2015

கும்மி அடிக்கும் குஷ்பு

தமிழக அரசியலில் அநாதையாக நிற்கும் தமிழக காங்கிரஸுக்கு மின்னும் நட்சத்திரமாக குஷ்பு கிடைத்துள்ளார். திராட  முன்னேற்றக்கழகத்தில் அரசியலை ஆரம்பித்த குஷ்பு இப்போது காங்கிரஸில் தஞ்சமடைந்திருக்கிறார்.குஷ்புவுக்கு  மதிப்பு கொடுத்து அவரை  வரவேற்றுள்ளது காங்கிரஸ்.

வாசனின் வெளியேற்றத்தால் துவண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு குஷ்புவின் வரவு புதிய தெம்பைக்கொடுத்துள்ளது;தமிழகத்தில் காங்கிரஸின் இருப்பை வெளிக்காட்ட ஏதாவது செய்ய வேண்டும்  என விரும்பிய  தமிழக காங்கிரஸ் தலைவர்  இளங்கோவன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கையில் எடுத்துள்ளார்.  


தமிழக ஆளுனரைச் சந்தித்த இளங்கோவந்தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கையளித்தார்முன்னாள் அமைச்சர் சிதம்பரம் குமரி அனந்தன் ஆகியோருடன் . குஷ்புவும் அவருடன் சென்றார். தமிழக அமைச்சரவையில் உள்ள 25 துறைகளில் ஊழல் நடைபெற்றதாக அப்பட்டியலில்கூறப்பட்டுள்ளது. ந்த ஊழலை விசாரித்து தமிழக அரசை கலைக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். காங்கிரஸ்யின் ஊழல்கள் பற்றி அவ்வப்போது செய்திகள் கசிந்தவண்ணம் இருக்கையில் தமிழக மைச்சர்களின் ஊழல் பட்டியலை  ஆளுனரிடம் கையளித்தார் இளங்கோவன்.
தமிழக காங்கிரஸில்  குஷ்புவை சுற்றி ஒரு கூட்டம் உருவாகி உள்ளது. இதனால்மூத்த தலைவர்கள்  கடும் அதிருப்தியில் உள்ளனர்குஷ்புவின் கூட்டத்துக்கு  அதிகளவான மக்கள் சேர்வதனால்; தமது இருப்பு இல்லாமல் போய்விடுமோ என அவர்கள் அஞ்சுகின்றனர்

 திராவிட முன்னேற்றக் கழகத்தில் குஷ்பு சேர்ந்த போதும் இதேபோல் தான் மூத்த தலைவர்கள் எரிச்சலடைந்தனர். சர்ச்சைகள்  பிரச்சினைகள் என்பன குஷ்புவுக்கு புதியதல்ல. அழகிரிக்கு ஆதரவாககருத்துத்  தெரிவித்ததனால் ஸ்டாலினின் ஆதரவாளர்கள் அவரை வறுத்தெடுத்தனர். சுவாமிப்படத்துக்கு முன்னால் மேடையிலே காலுக்கு மேல் கால் போட்டு செருப்புடன் இருந்ததனால் ஆன்மீகவாதிகள் பிடித்து உலுக்கினார்கள்.திருமணத்துக்கு முன்னைய உடல் உறவு பற்றிய கருத்தினால் நீதிமன்றப்படி  ஏறினார்உருத்திராட்ச மாலையில் தாலி கோர்த்த பிரச்சினை இன்னமும் ஓயவில்லை.

பிரச்சைனைகளின் உறைவிடமான குஷ்புவுக்கு தமிழக காங்கிரஸிலும் வெளித்தெரியாத பிரச்சினைகள் உள்ளன. அதுவரை குஷ்புவை அங்கிருந்து அசைக்க முடியாது.

No comments: