Thursday, April 30, 2009

மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்



மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்

மும்பை, பஞ்சாப் ஆகிய அணிகளுக்கிடையே கேப்டவுனில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் பஞ்சாப் அணி மூன்று ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை இழந்து 119 ஓட்டங்கள் எடுத்தது.
மும்பை இந்தியன் அணிவீரர்களின் பந்து வீச்சில் பஞ்சாப் அணி வீரர்கள் நிலை குலைந்தனர். ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கயன் கோயல் ஹர்பஜனின் பந்தில் சிக்ஸர் அடித்து மகிழ்ந்திருந்த வேளையில் அடுத்த பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
12 பந்துகளைச் சந்தித்த கயன் கோயல் ஒரு சிக்ஸர் உட்பட 12 ஓட்டங்கள் எடுத்தார். ரவி போபரா ஆறு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சங்ககாரவுடன் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தும் என எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள். அணித் தலைவர் யுவராஜ் சிங் 10 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். மஹேல 7, பதான் 7, மோடா ஐந்து, தவான் 0, சரத் பவார் 10 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.
பஞ்சாப் வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேறிக் கொண்டிருந்த வேளை தனி நபராக தனித்து நின்று போராடிய சங்ககார ஆட்டமிழக்காது 45 ஓட்டங்கள் எடுத்தார். 44 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர் ஒரு சிக்ஸர், இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்கள் எடுத்தார். சக்கக்காரவுக்கு அடுத்தபடியாக உதிரிகளாக 17 ஓட்டங்களை மும்பை அணி கொடுத்தது. மும்பை அணியின் தோல்விக்கு அதிகூடிய உதிரிகளும் ஒரு காரணம். உதிரிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தால் மும்பை அணி சில வேளை வெற்றி பெற்றிருக்கலாம்.
மலிந்த இரண்டு விக்கெட்டுகளையும் சஹீர்கான், ஹர்பஜன் சிங், பிராவோ, டுமினி, ஜயசூரிய ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.
120 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை எடுத்து தோல்வியடைந்தது.
பதானின், பந்தை யுவராஜிடம் பிடிகொடுத்த ஜயசூரிய ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார். மலிக்கின் பந்தை மஹேலவிடம் பிடிகொடுத்து சச்சின் டெண்டுல்கர் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
மூன்று ஓட்டங்கள் எடுத்த தவான் அப்துல்லாவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். மும்பை அணி 12 ஓட்டங்களில் மூன்று விக்öகட்டுகளை இழந்தது.
பிராவோ, நாயர் ஆகியோர் தலா 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். ஹர்பஜன் ஆறு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஆறு விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 101 ஓட்டங்களை எடுத்தது. மும்பை அணி வீரர்கள் ஆட்டமிழந்த போதும் டுமினி வெற்றியை நோக்கி துடுப்பெடுத்தாடினார்.
கடைசி ஓவரில் 12 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தபோது டுமினியை நோக்கி யூசுப் அப்துல்லா பந்தை வீசினார். முதல் பந்தில் டுமினி இரண்டு ஓட்டங்கள் எடுத்தார். இரண்டாவது பந்தில் ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை. மூன்றாவது பந்தில் வைட் மூலம் ஒரு ஓட்டம் கிடைத்தது.
மீண்டும் வீசிய மூன்றாவது பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தார் டுமினி மூன்று பந்துகளில் ஏழு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டபோது பரபரப்பு தொற்றியது. நான்காவது பந்தை சிக்ஸரை நோக்கி தூக்கி அடித்தார் டுமினி. டீப் மிட் விக்கட் திசையில் டுமினி கோக்லி பிடித்து டுமினியை ஆட்டமிழக்கச் செய்தார்.
கோக்லி கொஞ்சம் தடுமாறி இருந்தால் அந்தப் பந்து சிக்ஸருக்குப் போயிருக்கும். 63 பந்துகளுக்கு முகம் கொடுத்த டுமினி நான்கு பௌண்டரி அடங்கலாக 59 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய சவுராப் திவாரி ஐந்தாவது பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தார். கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்தால் வெற்றி, பௌண்டரி அடித்தால் சமநிலை. கடைசிப் பந்தைச் சந்தித்த திவாரி ஒரு ஓட்டத்தை மட்டும் எடுத்தார். 20 ஓட்டங்களில் ஏழு விக்கட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை எடுத்த மும்பை அணி நான்கு ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பஞ்சாப் அணி ஆறு போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
ஐந்து போட்டிகளில் விளையாடிய மும்பை அணி இரண்டு வெற்றிகளையும் இரண்டு தோல்விகளையும் பெற்றுள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இர்பான் பதான், அப்துல்லா ஆகியோர் தலா இரண்டு விக்öகட்டுகளையும் மாலிக் பவர், சவ்லா ஆகியோர் தலா ஒரு விக்öகட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக சங்கக்கார தெரிவு செய்யப்பட்டார்.

ரமணி

0000


கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூர்

பெங்களூர் ரோயல் சலஞ்சர் கொல்கத்தா நைட் ரைடர் அணிகளுக்கிடையே டேர்பனில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் ரோயல் சலஞ்சர் அணி ஐந்து விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணித் தலைவர் மக்கலம் தனது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அணித் தலைவர் மக்கலடு கைல்ஸும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் சார்பில் அதன் அணித்தலைவர் பீட்டர்சன் முதல் ஓவரை வீசினார். பார்வையாளர்களுக்கு இது பலத்த அதிர்ச்சியைத் கொடுத்தது. பீட்டர்சனின் பந்து வீச்சினால் பார்வையாளர்களை விட மக்கலம் அதிகம் ஆச்சரியப்பட்டார் மக்கலம். பீட்டர்ஸன் வீசிய முதல் பந்தை கோக்லியிடம் பிடி கொடுத்து ஓட்டம் எதுவும் எடுக்காது வெளியேறினார் மக்கலம். அடுத்து வந்த ஹெட்ஜை எல்.பி.டபிள்யூ. மூலம் வெளியேற்றினார் கும்ப்ளே. 15 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஹெட்ஜ் ஒரு சிக்ஸர் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 17 ஓட்டங்களை எடுத்தார். அடுத்து களமிறங்கிய கங்குலி ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். எட்டு பந்துகளுக்கு முகம் கொடுத்த கங்கலி பிரவீன்குமாரின் பந்தை கலிஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
8.3 ஓவர்களில் 54 ஓட்டங்கள் எடுத்தவேளை கைல்ஸ் வான்விச் ஜோடி இணைந்தாலும் இந்த ஜோடியும் அதிக நேரம் ஆடவில்லை. பொறுப்புடன் விளையாடிய கைல்ஸ் ஆட்டமிழந்தார்.
37 பந்துகளுக்கு முகங்கொடுத்த கைல்ஸ் ஆறு பௌண்டரி அடங்கலாக 40 ஓட்டங்கள் எடுத்திருந்தவேளை அப்பன்னாவின் பந்தை கேன்ஸ் சுவாமியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
மத்திய வரிசை வீரர்களான வான்விக்ஷா ஆகியோரின் துடுப்பாட்டத்தின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 100 ஓட்டங்களைக் கடந்தது. 14 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஷா கும்ப்ளேயின் பந்தை பீட்டர்ஸனிடம் பிடிகொடுத்து ஒரு சிக்ஸர் அடங்கலாக 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சுக்லா இரண்டு ஓட்டங்களில் வெளியேறினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்கள் எடுத்தது.
கும்ப்ளே 16 ஓட்டங்களைக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். பீட்டர்ஸன், வன்டேமெர்ன் பிரவீன்குமார் அப்பன்னா ஆகியோர் தலா ஒரு விக்கட்டை வீழ்த்தினர்.140 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் ரோயல் சலஞ்சர் அணி பரபரப்பான போட்டியில் ஒரு பந்து மீதமிருக்கையில் வெற்றி பெற்றது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கலிஸும் கோஸ்வாமியும் 11.1 ஓவர்கள் வரை விளையாடி 69 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
43 பந்துகளுக்கு முகம் கொடுத்த கோஸ்வாமி ஆறு பௌண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை ஹொட்ஜின் பந்தை விக்கெட் காப்பாளர் வின்டேமெர்னிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
23 ஓட்டங்களில் கலிஸ் ஆட்டமிழந்தார். பீட்டர்ஸனுடன் கோல்கி இணைந்தார். கோல்கி 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 18.5ஆவது ஓவரில் பீட்டர்ஸன் ஆட்டம் இழந்தார். கடைசி இரண்டு ஓவர்களில் 14 ஓட்டங்கள் அடித்தார்.
வெற்றி பெறலாம் என்ற நிலையில் மார்க் பௌச்சருடன் இணைந்தார் வான்டன் மெர்வின். 19ஆவது ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். நான்கு ஓட்டங்களை மட்டும் விட்டுக் கொடுக்க முடிந்த சர்மா வான் டென் மெர்வினின் விக்கெட்டை வீழ்த்தினார்.
ஒரு ஓவரில் 10 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் மேற்கிந்தியத்தீவு அணி வீரரான கைல்ஸ் பந்தை வீசினார். அதனை எதிர்கொண்ட பன்ட் ஓட்டத்தை எடுத்தார். தென் ஆபிரிக்காவின் அனுபவ வீரரான மார்க் பௌச்சர், கைல் வீசிய இரண்டாவது பந்தில் பௌண்டரி அடித்து பதற்றத்தைக் குறைத்தார். அடுத்த இரண்டு பந்துகளில் அவர் இரண்டு ஓட்டங்களை எடுத்தார். வெற்றி பெறுவதற்கு ஒரே ஒரு ஓட்டம் எடுக்க தேவைப்பட்டபோது பௌண்டரி அடித்து வெற்றி பெற்றது பெங்களூர் அணி. 13 பந்துகளுக்கு முகம் கொடுத்த பௌச்சர் ஒரு சிக்ஸர் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 25 ஓட்டங்கள் எடுத்தார். ஹட்ஜ் மூன்று விக்öகட்டுகளையும், இஷாந்த் சர்மா இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்தனர். பௌச்சர் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
வானதி


000


பதானின் அதிரடியில் வென்றது ராஜஸ்தான்

செஞ்சூரியனில் நடந்த ஐ.பி.எல். ருவென்ரி20 போட்டியில் பதானின் அட்டகாசமான அதிரடியால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலாவது தோல்வியைப் பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் ஏழு விக்கட்டுகளை இழந்து 143 ஓட்டங்கள்
எடுத்தது.
மஸ்கரனாஸின் பந்தை ஷேன் வோர்னிடம் பிடி கொடுத்த கம்பீர் எட்டு ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். மஸ்கரனாஸ் டெல்லிக்கு மேலும் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தார். மஸ்கரனாஸின் பந்தை கம்ரன் கானிடம் பிடி கொடுத்த ஷெவாக் 16 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். வில்லி யஷûடன் இணைந்த டில்ஷான் 7 ஓட்டங்களுடன் டினேஷ் கார்த்திக் நான்கு ஓட்டங்களில் ஷேன் வோனின் பந்øத அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி அணியின் விக்கெட்டுகள் மளமளவென விழுந்த போதும் கலங்காது விளையாடிய டிவில்லியுஷûடன் இணைந்த வெட்டோரி அணியின் எண்ணி க்கை 100 ஐ கடக்க உதவி செய்தார்.
ஷேன் வோனின் பந்தில் பௌண்டரி அடித்து 50 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த டி. வில்லியஸ் ஷேன் வோனின் அடுத்த பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். 40 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர் ஒரு சிக்ஸர், ஐந்து பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் எடுத்தார். வெட்டோரி 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர் முடிவில் ஏழு விக்கட்டுகளை இழந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 143 ஓட்டங்கள் எடுத்தது.
மஸ்கரனாஸ், பட்டேல், ஷேன் வோர்ன் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும் கம்ரன் கான் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.
144 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 18.3 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகளை இழந்து 147 ஓட்டங்கள் எடுத்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான குயினி நான்கு ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்து வந்த அஸ்நொட்கர் 11 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார். ஸ்மித் போராட ஏனைய வீரர்கள் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஜடேஜா 16 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் ஷேன் வோன் ஓட்டம் எதனையும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணி ஐந்து விக்கட்டுகளை இழந்து 64 ஓட்டங்கள் எடுத்தபோது ஸ்மித்துடன் பதான் ஜோடி சேர்ந்தார்.
இவர்கள் இருவரும் இணைந்து ராஜஸ்தான் அணிக்கு வெற்றிøயத் தேடிக் கொடுத்தனர். ஸ்மித் நிதானமாக ஆட யூசுப் பதான் அதிரடியாக ஆடி டெல்லியிடம் இருந்த வெற்றியை தட்டிப் பறித்தார்.டெல்லி அணியின் களத்தடுப்பு மிக மோசமாக இருந்தது. வெட்டேரி. வீசிய முதல் பந்தில் இரண்டு சிக்ஸர் அடித்து தனது அதிரடியை நிரூபித்தார் பதான். பீட்டர்ஸனின் அந்த ஓவரில் 19 ஓட்டங்கள் எடுத்தார் பதான். 21 ஓட்டங்கள் 34 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை பதானின் பிடிகளை டெல்லி வீரர்கள் தவறவிட்டனர். பதானின் மின்னல்வேக ஆட்டத்தினால் 18.3 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகளை இழந்த ராஜஸ்தான் 147 ஓட்டங்கள் எடுத்து ஐந்து விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.
46 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஸ்மித் ஐந்து பவுண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்கள் எடுத்தார். 30 பந்துகளைச் சந்தித்த பதான் ஆறு சிக்ஸர், மூன்று பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்கள் எடுத்தார். அம்ரித் மிஸ்ரா மூன்று விக்கெட்டுகளையும் நெஹ்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக பதான் தெரிவு செய்யப்பட்டார்
.வானதி

Tuesday, April 28, 2009

ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்

ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்

கேப்டவுனில் நடைபெற்ற ருவன்ரி 20 போட்டியில் நடப்பு சம்பியனான ராஜஸ்தான் ரோயல்ஸை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. கிங்ஸ்11பஞ்சாப். நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்கள் எடுத்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கோயல், ரவிபோபரா ஆகிய இருவரும் ஏமாற்றிவிட்டனர்.
11ஓட்டங்கள் எடுத்திருந்த ரவி போபரா, கம்ரன்கானின் பந்தை, பட்டேலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். கொயல் ஓட்டம் எதுவும் எடுக்காது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
அணித் தலைவர் யுவராஜ் சிங் இரண்டு ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். மஹேல ஏழு ஓட்டங்களில் வெளியேறினார்.
பஞ்சாப் அணியின் நான்கு விக்கெட்களும் 48 ஓட்டங்களில் வீழ்ந்து இக்கட்டõன நிலையில் இருந்த போது களத்தில் இணைந்த சங்கக்கார, பதõன் ஜோடி அதிரடி காட்டி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது.
9.5 ஓவர்களில் 75 ஓட்டங்கள் அடித்து அணிக்கு தெம்பூட்டியது. கம்ரன்கானின் பந்தில் பதான் ஆட்டமிழந்தார். 33 பந்துகளுக்கு முகம் கொடுத்த பதான் இரண்டு சிக்ஸர் இரண்டு பௌண்ரிகள் அடங்கலாக 39 ஓட்டங்கள் எடுத்தார்.
மிகச் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய சங்கக்கார ரன் அவுட் முறையில் ஆட்டம் இழ ந்தார். 51 பந்துகளுக்கு முகம் கொடுத்த சங்கக்கார ஒரு சிக்ஸர் ஏழு பௌண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்கள் எடுத்தார்.
பஞ்சாப் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்கள் எடுத்தது. கம்ரன்கான், பட்டேல் ஆகிய இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 140 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 112 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
ராஜஸ்தான் ரோயலின் வீரர்கள் மளமளவென ஆட்டம் இழந்தனர். ஸ்மித் 2, ராம் கியூனோ 7, மஸ்கானாஸ் 4 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர். பதான் 10 ஓட்டங்களில் வெளியேறினார். ராஜஸ்தான் ரோயலின் முதல் ஐந்து விக்கெட்டுகளும் 36 ஓட்டங்களில் வீழ்ந்தது. ஏழாவது விக்கெட்டில் இணைந்த ஜடேஜாவும் அணித்தலைவர் ஷேன்வோனும் அணியை தோல்வியிலிருந்து மீட்க கடுமையாக போராடினார்கள். பஞ்சாப் வீரர்களின் பந்து வீச்சுக்கு முன்னால் நிலைத்து நிற்க முடியாது ஜடேஜா ஆட்டமிழந்தபோது பஞ்சாப் அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது.
44 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஜடேஜா 37 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது அப்துல்லாவின் பந்தில் ஆட்டமிழந்தார். ஷேன்வோன் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 112 ஓட்டங்களை எடுத்தது.
அப்துல்லா மூன்று விக்கெட் டுகளையும் பதான், சவ்லா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக சங்கக்கார தெரிவு செய்யப்பட்டார்.
இந்தப்போட்டியில் சகோதரர்களான யூசுப்பதான் ராஜஸ்தான் றோயல் அணிக்கும் இர்பõன் பதான் பஞ்சாப் அணிக்கும் விளையாடினார்கள். இர்பான் பதான் தனது அண்ணனான யூசுப்பதானின் பந்துக்கு ஒரு சிக்ஸர் அடித்தார். யூசுப் பதõன் தம்பியான இர்பான் பதானின் பந்தில் இரண்டு பௌண்டரிகள் அடித்தார்.
ரமணி


000


கடைசி ஓவரில் வென்றது டில்லி

டில்லி டேர்டெவில்ஸ், பெங்களூர் ரோயல் சலஞ்ச் ஆகியவர்களுக்கிடையே போர்ட் எலிஸபெத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் டெல்லி டேர்ல் டெவில்ஸ் எட்டு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது.
நானிசின் முதல் பந்தில் ஓட்டம் எதுவும் எடுக்காத கலிஸ் ஆட்டமிழந்தார். பந்து வெளியே போகும் என எதிர்பார்த்ததனால் அடிப்பதைத் தவிர்த்ததும் எதிர்பார்க்காத நிலையில் பந்து விக்கெட்டில் பட்டது. மூன்று ஓட்டங்கள் எடுத்திருந்த உத்தப்பாவை, நெஹ்ரா வெளியேற்றினார்.
மூன்றாவது இணைப்பாட்டத்தில் விளையாடிய பீட்டர்ஸன், டெய்லர் ஜோடி 62 ஓட்டங்கள் எடுத்து தெம்பூட்டியது. 25 பந்துகளுக்கு முகம் கொடுத்து இரண்டு சிக்ஸர் இரண்டு பௌண்டரி அடங்கலாக 37 ஓட்டங்கள் எடுத்த பீட்டர்ஸன் வெட்டோரியின் பந்தில் ஆட்டமிழந்தார். பீட்டர்ஸன் வெளியேறியதும் அணி நம்பிக்கை வைத்திருந்த டைலர், ஆம்ரித், மிஸ்ராவின் பந்தில் எல்.பீ. டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய மார்க் பௌச்சர் கோக்லி ஜோடி வேகமாக ஓட்ட எண்ணிக்கை உயர வழிவகுத்தது. டெல்லி அணிக்கு நெருக்கடியைக் கொடுத்த இந்த ஜோடியை சர்வான் பிரித்தார். 28 பந்துகளுக்கு முகம் கொடுத்து இரண்டு சிக்ஸர் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்கள் எடுத்த மார்க் பௌச்சர், சர்வானின் பந்தை மிஸ்ராவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்கள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினர்.
பெங்களூர் றோயல் சலஞ்சஸ் 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது.
நெஹ்ரா இரண்டு விக்கெட்டுகளையும், நன்ஸ், சர்வான், மிஸ்ரா, வெட்டோரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
150 என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் 19.2 ஓவர்களில் நான்கு விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை வீரர் டில்ஷானின் அதிரடி டெல்லி அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.
டெல்லி டேவில்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஷேவாக்கும் கம்பீரும் இம்முறையும் ஏமாற்றினார்கள். 16 ஓட்டங்கள் எடுத்த ஷேவாக் பங்கஜ் சிங்கின் பந்தை பௌச்சரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். கம்பீர் ஏழு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். டில்லி அணியின் அதிரடி வீரர்கள் இருவரும் ஆட்டமிழந்ததனால் பெங்களூர் அணி உற்சாகமடைந்தது.
மூன்றாவது இணைப்பாட்டத்தில் விளையாடிய டில்ஷான் டிவிலியஸ் ஜோடி ஓட்ட எண்ணிக்கையை விரட்டத் தொடங்கியது. டிவில்லியஸ் நிதானமாக துடுப்பெடுத்தாட டில்ஷான் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தார். அப்பண்ணா இந்த ஜோடியைப் பிரித்தார். 23 பந்துகளுக்கு 21 ஓட்டங்கள் எடுத்த டிவில்லியஸ், அப்பண்ணாவின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கார்த்திக் நெடு நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அகிலின் பந்தை கலிஸிடம் பிடிகொடுத்து 12 ஓட்டங்களுடன் வெளியேறினார். டெல்லி அணியின் விக்கெட்கள் வீழ்ந்த போதும் டில்ஷான் தனது அதிரடியை கைவிடவில்லை. கடைசி நான்கு ஓவர்களில் 43 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது. 17 ஆவது ஓவரை வீசிய கலிஸ் 19 ஓட்டங்களை வாரி வழங்கியதால் டெல்லியின் பதற்றம் குறைந்தது. மன்ஹால் அடித்த பந்தை அப்பண்ணாதவற விட்டதால் அப்பந்து பௌண்டரி எல்லையை கடந்தது. கடைசி ஓவரில் இரண்டு ஓட்டங்களை இலகுவாகப் டில்லி வெற்றி பெற்றது.
47 பந்துகளுக்கு முகம் கொடுத்த டில்ஷான் இரண்டு சிக்ஸர், ஐந்து பௌண்டரி அடங்கலாக 67 ஓட்டங்கள் எடுத்தார்.13 பந்துகளுக்கு முகம் கொடுத்த மன்ஹால் 23 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆட்டநாயகனாக டில்ஷான் தெரிவு செய்யப்பட்டார். பங்கஜ் சிங் இரண்டு விக்கெட்டுகளையும் அப்பண்ணா அகில் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஐந்து போட்டிகளில் விளையாடிய பெங்களூர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. டெல்லி டெவில்ஸ் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
வானதி

Monday, April 27, 2009

காங்கிரஸ் கட்சியை எதிர்த்துதமிழ்த்திரை உலகம் போர்க்கொடி


தமிழகத்தில் அரசியல் கட்சிகளை வளர்த்துவிட்ட சினிமா உலகம், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக களமிறங்கத் தயாராகி விட்டது. தமிழக அரசியல் தேர்தல் களத்தில் இலங்கைப் பிரச்சினையும் தவிர்க்க முடியாததொன்றாகிவிட்டது. வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், பழ. நெடுமாறன் இலங்கையில் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்ற ஒருமித்த குரல் கொடுத்து வந்தனர். இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் இவர்களைப் பிரித்து விட்டது.
பாரதிராஜா, அமீர், சீமான், சத்தியராஜ், மணி வண்ணன், மன்சூர் அலிகான், ரி. ராஜேந்தர் போன்ற தமிழ் இன உணர்வாளர்களும் இலங்கையில் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக பல போராட்டங்களை நடத்தினார்கள். அரசியலுக்கு அப்பால் இவர்கள் நடத்திய இன உணர்வுப் போராட்டம் தமிழகத்தில் எழுச்சியை உண்டாக்கியது.
வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் தமது கட்சியின் வளர்ச்சியையும், மத்திய அரசில் பங்கு போடுவதையும் கருத்தில் கொண்டு இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை மறைமுகமாக அங்கீகரிக்கும் கட்சிகளின் முதுகில் சவாரி செய்யத் தயாராகி விட்டனர்.
தமது சாதனைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் முன்னெடுத்து தமிழக அரசியல் கட்சிகள் வாக்கு வேட்டையை ஆரம்பித்துள்ளன. இலங்கைப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு நாடாளுமன்றம் பொதுத் தேர்தலைச் சந்திக்க தமிழ் இன உணர்வாளர்கள் தயாராகி விட்டதாக செய்தி கசிந்துள்ளதால் காங்கிரஸ் கட்சி கலங்கிப் போயுள்ளது. தமிழக அரசியல் களத்தில் இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்ற நம்பிக்கை தமிழ் இன உணர்வாளர்களிடம் உள்ளது. இலங்கை விவகாரத்தினால் தமக்கு ஒரு பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என அடுத்த முதல்வர் என திராவிட முன்னேற்றக்கழக உடன்பிறப்புக்களால் வர்ணிக்கப்படும் மு.கா.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆனால், இலங்கை விவகாரம் தமிழக அரசியல் தேர்தல் களத்தில் விஸ்வரூபம் எடுக்கும் என ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய மத்திய அரசின் பூரண ஆதரவுடன்தான் இலங்கை அரசு யுத்தம் நடத்துகிறது எனவும் ஆகையினால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 16 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்போவதாகவும் திரைஉலகைச் சேர்ந்த பலர் தெரிவித்துள்ளனர்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குற்றஞ்சாட்டி தமிழக அரசினால் சிறைக்கு அனுப்பப்பட்ட சீமான், அமீர் ஆகியோரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற விருப்பமும் தமிழ் உணர்வு ஆர்வலர்களிடம் உள்ளது.
பாரதிராஜா, அமீர், சீமான், சத்தியராஜ், ஆர்.கே. செல்வமணி, ஆர். சுந்தரராஜன் போன்றவர்கள் தமிழ் உணர்வு ஆர்வலர்கள் குழுவில் முக்கியமானவர்களாக உள்ளனர். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் இலங்கை விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் தீவிர பிரசாரம் செய்ய இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சீமான், அமீர் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் வைகோ, திருமாவளவன், டாக்டர் ராமதாஸ் ஆகியோரின் பிரசாரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இலங்கைத் தமிழ் மக்கள் அனுபவிக்கும் இன்னல்களைக் கண்டு கொதித்தெழும் இவர்கள் தமது தமிழ் உணர்வு ஆர்வலர்களை எதிர்த்து தமது கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்பவர்களா? அல்லது சீமான், அமீர் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் செய்யாது ஒதுங்குவார்களா?
நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் போட்டியில் தமிழகக் கட்சிகள் அனைத்தும் இலங்கைப் பிரச்சினையையும் கையில் எடுத்துக் கொண்டு பிரசாரம் செய்கின்றன. தமிழ் உணர்வு ஆர்வலர்கள் இலங்கைப் பிரச்சினையை மட்டும் முன்னிறுத்தி பிரசாரம் செய்யப் போகின்றனர். தமிழ் உணர்வு ஆர்வலர்களின் அரசியல் பிரவேசம் காங்கிரஸ் கட்சிக்கு சவாலாக உள்ளது. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழகம் கொதித்து எழுந்ததுபோன்று இலங்கைத் தமிழர் விவகாரம் காரணமாக காங்கிரஸ் கட்சியை தமிழக மக்கள் ஒதுக்கி விடுவார்களோ என்ற அச்சமும் அக்கட்சியினருக்கு எழுந்துள்ளது.
இதேவேளை ஜெயலலிதாவுக்கும் வைகோவுக்கும் இடையிலான முறுகல் அதிகரித்துள்ளது. வேட்பாளர் மனுத்தாக்கல் செய்வதற்கு தனது ஆஸ்தான சோதிடர் மூலம் நல்லநாளை அறிவித்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்த பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளும் மறுப்பேதும் கூறாது நல்ல நாளில் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன. ஆனால், வைகோ மட்டும் அடம் பிடித்தார். ஜெயலலிதா அறிவித்த நல்ல நாளில் வைகோ வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாக ஜெயலலிதாவின் கோபம் அதிகரித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற கூட்டணி வேட்பாளர் அறிமுக விழாவில் ஜெயலலிதாவும் வைகோவும் ஒரே மேடையில் இருந்து கை உயர்த்தி சிரித்தபடி காட்சியளித்தனர். மேடையை விட்டு இறங்கியதும் பழையபடி இருவரும் எதிரும் புதிருமானார்கள்.
ஜெயலலிதா பிரசாரம் செய்யாமலே தன்னால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார். வைகோ, டாக்டர் ராமதாஸ், தா. பாண்டியன், என். வரதராஜன் ஆகியோரின் உதவியுடன் அரச தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தேர்தலில் குதித்துள்ளார் ஜெயலலிதா.
மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்ற உண்மையை அரசியல்வாதிகள் அனைவரும் அறிந்துள்ளதோடு அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால் மத்தியில் ஆட்சி அமைக்கும் கூட்டணிக் கட்சியுடன் இணையலாம் என்ற எண்ணம் ஜெயலலிதாவிடம் உள்ளது.
நடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் கூட்டணிக்கட்சிகள் ஆளுக்கொரு திசையில் பிரிந்து விடும் என்பதை இப்பொழுதே மறைமுகமாக வெளிப்படுத்துகின்றன.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு 26/04/2009

மூன்றாவதுவெற்றியை பெற்றது டொக்கான் சார்ஜஸ்


டேர்பனில் நடைபெற்ற ஐ.பி.எல். டுவென்ரி20 போட்டியில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜஸ் 12 ஓட்டங்களினால் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெக்கான் சார்ஜஸ் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்கள் எடுத்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கில்கிறிஸ்டும் கிப்ஸும் தமது அதிரடியால் மும்பை அணி வீரர்களின் பந்துகளை விளாசினர்.
20 பந்துகளில் மூன்று சிக்ஸர், மூன்று பௌண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங் கள் எடுத்த கில்கிரிஸ்ட் ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 6.5 ஓவர்களில் 63 ஓட்டங்கள் எடுத்தனர்.
கிப்ஸ், ஸ்மித் ஜோடி இணைந்து ஓட்ட எண்ணிக்கையை மேலும் உயர்த்தியது. 22 பந்துகளில் இரண்டு சிக்ஸர், இரண்டு பௌண்டரி அடங்கலாக 35 ஓட்டங்களை எடுத்து ஸ்மித் ஜயசூரியவின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரோஹித் சர்மா மூன்று ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். லக்ஷ்மன் ஓட்டமெதுவும் எடுக்காது வெளியேறினார்.
டெக்கான் அணி வீரர்கள் வரிசையாக வெளியேற தனது அதிரடியை வெளிக்காட்டிய கிப்ஸ் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 44 பந்துகளுக்கு முகம் கொடுத்து இரண்டு சிக்ஸர், ஆறு பௌண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்கள் எடு த்தார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் ஒன்றை ஓட்டங்க ளுடன் வெளியேறினர். 20 ஓவர்களில் ஹைதராபாத் டெக்கான் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்கள் எடுத்தது.
மாலிங்க 19 ஓட்டங்களைக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் பிராவோ 34 ஓட்டங்களைக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் எடுத்தனர். ஹர்பஜன், ஜயசூரிய ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
மும்பை வீரர்கள் 14 ஓட்டங்களை உதிரிகளாக விட்டுக் கொடு த்தனர். மும்பை அணியின் தோல்விக்கு அதிக உதிரிகளும் காரணமாயின.
மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் ஏழு விக்öகட்டுகளை இழ ந்து 156 ஓட்டங்களை எடுத்தது.
இரண்டாவது ஓவரிலேயே மும்பை அணி ஜயசூரியவை இழந்தது. ஹர்பஜனின் பந்தை கில்கிறிஸ்டிடம் பிடி கொடுத்த ஜயசூரிய 90 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
டெண்டுல்கர், டுமினி ஜோடி மும்பை அணிக்கு உற்சாகமூட்டியது. 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 84 ஓட்டங்கள் எடுத்தது மும்பை அணி. டெக்கானை வீழ்த்தி மும்பை வெற்றி பெறும் என்ற எண்ணம் ரசிகர்களிடம் ஏற்பட்டிருந்த போது பந்து வீசிய ஓஜா மும்பையின் கனவைத் தகர்த்து ஹைதராபாத் டெக்கானுக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார். 27 பந்துகளுக்கு முகம் கொடுத்து இரண்டு சிக்ஸர், மூன்று பௌண்டரிகள் அடங்கலாக 36ஓட்டங்கள் எடுத்த டெண்டுல்கர் ஓஜாவின் பந்தை கிப்ஸிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். மூன்று ஓட்டங்களுடன் தவானையும் வெளியேறினார் ஓஜா. 40 பந்துகளைச் சந்தித்து டுமினி இரண்டு சிக்ஸர், நான்கு பௌண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்கள் எடுத்தார்.
முதல் போட்டியில் கதகளி ஆடி வெற் றியைத் தேடிக் கொடுத்த அபிஷேக் நாயர் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பிராவோ, ஹர்பஜன் ஜோடி வெற்றியை நோக்கி முனைப்புடன் விளையாடியது. பிராவோ 21 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். எட்டு பந்துகளைச் சந்தித்த ஹர்பஜன் இரண்டு சிக்ஸர், ஒரு பௌண்டரி அடங்கலாக 20 ஓட்டங்கள் எடுத்தபோது ஆர்.பி. சிங்கின் பந்தை ஸ்மித்திடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஹர்பஜன் ஆட்டமிழந்ததும் ஹைதராபாத் டெக்கான் அணியின் வெற்றி உறுதியானது.
20 ஓவர் முடிவில் மும்பை அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்கள் எடுத்தது.
ஓஜா மூன்று விக்கட்டுகளையும் எட்வேட், ஆர்.பி. சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக ஓஜா தெரிவு செய்யப்பட்டார்.
ஹைதராபாத் டெக்கான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள் ளது. கொல்கத்தாவை எட்டு விக்கெட்டுகளினாலும் பெங்களூர் ரோய ல்ஸை 24 ஓட்டங்களினாலும் டெக்கான் அணி வீழ்த்தியது.
கடந்த ஐ.பி.எல். போட்டியின் கடைசி மூன்று போட்டிகளிலும் டெக்கான் தோல்வியடைந்தது.
மும்பை அணிக்கு இது முதல் தோல்வி. சென்னை அணியை 19 ஓட்டங்களினால் வீழ்த்தியது மும்பை அணி. ராஜஸ்தான் ரோயல்ஸுடனான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டு இரண்டு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
ரமணி

Friday, April 24, 2009

திரைக்குவராதசங்கதி 9


திரை உலகில் பல புதுமைகளைப் புகுத்தியவர் ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ். வாசன். திரைப்படத்தை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதற்காக வித்தியாசமான முறையில் விளம்பரங்களை வெளியிட்டவர். ஜெமினி ஸ்டூடியோவின் வித்தியாசமான விளம்பரத்துக்கு காரணமானவர் பி.பி.நம்பியார்.
1948 ஆம் ஆண்டு ஜெமினி நிறுவனம் தயாரித்த சந்திரலேகா தமிழிலும், ஹிந்தியிலும் பெரு வெற்றி பெற்றது. அந்தக் காலத்தில் சந்திரலேகா படத்தை தயாரிக்க 40 இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டது. விளம்பரத்துக்காக மட்டும் ஏழு இலட்சம் ரூபா செலவானது. சந்திரலேகா படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்தவர்கள் பி.பி.நம்பியார் கொடுத்த ஆலோசனையால் கவரப்பட்ட எஸ்.எஸ். வாசன், அந்த இளைஞருக்கு ஜெமினி ஸ்டூடியோவில் வேலை பெற்றுக் கொடுத்தார்.
சந்திரலேகா நாயகியான ராஜகுமாரியின் தலையை மட்டும் 60 அடி உயரத்தில் கட் அவுட்டாக வரைந்து பம்பாயில் சந்திரலேகா படம் வெளியான தியேட்டர்களின் வாசலில் வைத்து அசத்தினார் எஸ்.எஸ். வாசன். கல்கத்தாவில் முதன் முதலாக மின்சாரக் கம்பங்களில் திரைப்பட விளம்பரங்களை தொங்கவிட்டார்.
வாழ்க்கை படகு படம் ஹிந்தியில் ஜிந்தகி எனும் பெயரில் வெளியானது. வாழ்க்கைப் படகு படத்தின் வெளியீட்டு விழாவுக்காக ஜெமினி பட அதிபர் எஸ்.எஸ். வாசன் கல்கத்தாவுக்கு சென்றார். கல்கத்தா தியேட்டர் ஒன்றில் சத்திய ஜித்ரே இயக்கிய பதேர் பாஞ்சாலி திரையிடப்பட்டிருந்தது.
வாசனைக் கண்ட தியேட்டர் முகாøமயாளர் புதிய இளைஞரின்ஆர்ட் பிலிம் ஓடுகிறது கூட்டமே இல்லை.நீங்கள் விரும்பினால் அந்தப் படத்தை நிறுத்தி விட்டு ஜிந்ததியை வெளியிடலாம் என்றார்.
எஸ்.எஸ். வாசன் பதில் கூறவில்லை. இரவு பதேர் பாஞ்சாலி படத்தைப் பார்த்தார் அந்தப்படத்தின் தாக்கம் அவருடைய மனதைப் பாதித்தது. அருமையான அந்த படத்தைத் தியேட்டரில் இருந்து தூக்க அவருக்கு மனம் வரவில்லை. தியேட்டர் முகாமையாளரிடம் சத்திய ஜித்ரேயின் விலாசத்தைப் பெற்று சத்திய ஜித்ரேயின் வீட்டிற்குச் சென்று அவரை வாழ்த்தினார். தியேட்டர் முகாமையாளர் நொந்து கொண்ட பதேர்பாஞ்சாலி என்ற அப்படம் தான் ஒஸ்கார் விருது பெற்று சத்திய ஜித்ரேக்கு புகழைப் பெற்றுக்கொடுத்தது.
ஆனந்த விகடனின் வெளியான தில்லானா மோகனாம்பாளை திரைப்படமாக்கவிரும்பிய இயக்குனர் ஏ,பி. நாகராஜன் ஆனந்த விகடன் ஆசிரியரான எஸ்.எஸ். வாசனைச் சந்தித்து தில்லானா மோகனம்பாள் கதையின் உரிமையை வாங்கி விட்டு அதற்குரிய தொகையைக் கொடுத்தார். தில்லானா மோகனாம்பாள் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோது அடுத்த ஆனந்த விகடன் எப்போ வரும் என்று இலட்சக் கணக்கான வாசகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். தில்லானா மோகனம்பாளையும் நாதஸ்வரவித்துவான் சண்முகசுந்தரத்தையும் உருவாக்கிய பெருமைக்குரியவர். கொத்தமங்கலம் சுப்பு இலட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்து படித்த தில்லானா மோகனம்மாள் என்ற நாவலை உருவாக்கிய கொத்தமங்கலம் சுப்புவுக்கும் பணம் கொடுக்கவேண்டும் என்று நினைத்த இயக்குநர் ஏ.பி. நாகராஜன்கொத்தமங்கலம்சுப்புவின் வீட்டிற்குச் சென்று விபரத்தைக் கூறினார்.

ஏ.பி.நாகராஜன் முந்திக்கொண்டு எஸ்.எஸ். வாசன் கொத்தமங்கலம்சுப்புவின் வீட்டிற்குச் சென்று தில்லானா மோகனம்பாள் நாவலின் உரிமைக்காக ஏ..பி.நாகராஜன் கொடுத்த முழுத்தொகையையும் கொடுத்துவிட்டதை அறிந்து ஏ.பி.நாகராஜன் நெகிழ்ந்து விட்டார்.

ரமணி

மித்திரன் 19/04/2004

திரைக்குவராதசங்கதி 8


ஏ.வி.எம். நிறுவனத்தின் மிகச் சிறந்தபடங்களில் ஒன்று அன்னை. அப்படத்தில் பானுமதியின் நடிப்பைப் புகழாதவர்களே இல்லை. தனது வளர்ப்பு மகன் பெற்ற தாயிடம் போய்விடக் கூடாது என்று பதை பதைப்புடன் இயல்பாக நடித்து பாராட்டுப் பெற்றார் பானுமதி. பானுமதியின் வளர்ப்பு மகனாக நடித்தவர் உருண்டைக் கண்களும் குழந்தை சுபாவமும் உடைய ஹரிநாத். பானுமதியின் வளர்ப்பு மகனாக நடிப்பதற்கு முதலில் ஜெய்சங்கரைத்தான் மேக்கப் டெஸ்ட் செய்து பார்த்தார்கள். ஜெய்சங்கரின் சிறிய கண்களினால் அவர் நிராகரிக்கப்பட்டார். ஏ.வி.எம்.மால் நிராகரிக்கப்பட்ட ஜெய்சங்கரை ஜோசப் தளியத் கததாநாயகனாக்கினார். "இரவும் பகலும்' படத்தில் இரட்டை வேடத்தில் அறிமுகமாகி மக்கள் கலைஞர், தென்னகத்து ஜேம்ஸ் பொன்ட் ஆகிய பட்டங்களுடன் மக்கள் மத்தியில் அமோக ஆதரவைப் பெற்றார்.ஜெய்சங்கரும் சிவகுமாரும் ஒரே நேரத்தில்தான் திரை உலகில் அறிமுகமானார்கள். சிறிய நிறுவனத்தில் கதாநாயகனாக நடித்த ஜெய்சங்கரின் படம் வெற்றி பெற்றதால் அவரைத் தேடி பல வாய்ப்புகள் சென்றன. பெரிய நிறுவனத்தில் சிறிய வேடத்தில் நடித்த சிவகுமாருக்கு அதிகளவில் கிடைக்கவில்லை. சகலருடனும் சகஜமாகப் பழகும் ஜெய்சங்கர், சிவகுமாரைச் சந்திக்கும் சமயங்களில் உற்சாகப்படுத்துவார்.
ஜெய்சங்கரும் சிவகுமாரும் இளமைக் காலப் பள்ளிச்சகாக்கள். இருவரும் இணைந்து முதன் முதலில் எங்க பாட்டன் சொத்து என்ற படத்தில் நடித்தார்கள். பிரபல ஒளிப்பதிவாளரான கர்ணன் தயாரித்து இயக்கிய படம் ஆங்கிலப் படங்களுக்கு நிகராக சண்டைக்காட்சிகள் பல நிறைந்த திரைப்படம்.
ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்தார். கதாநாயகனை குற்றவாளி என நினைத்து அவரைக் கைது செய்யும் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் சிவகுமார் நடித்தார். ஜீவனாம்சம், சூதாட்டம், கன்னிப் பெண் ஆகிய படங்களில் ஜெய்சங்கரும் சிவகுமாரும் இணைந்து நடித்தார்கள்.
"இன்று நீ நாளை நான்' என்ற படத்தில் சிவகுமார் கதாநாயகனாகவும் அவருடைய அண்ணனாக ஜெய்சங்கரும் நடித்தார். நான் கதாநாயகனாக நடித்த போது என்னுடன் சிறிய பாத்திரத்தில் நடித்த சிவகுமார் கதாநாயகனாக நடிக்க நான் முக்கியமில்லாத பாத்திரத்தில் நடிப்பதா என்ற பந்தா இன்றி சிவகுமாருக்கு அண்ணனாக குணசித்திர வேடத்தில் நடித்தார்.புகழ்பெற்ற கதாநாயகனாகவும் வெற்றிப் பட நாயகனாகவும் நடித்த ஜெய்சங்கர் முரட்டுக் காளை என்ற படத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க வில்லனாக நடித்தார். கதாநாயகன், வில்லன் என்ற பாத்திரத்தை மறந்து எனக்குத் தொழில் நடிப்பு என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் அவரால் வில்லனாகவும் பிரகாசிக்க முடிந்தது.ஏ.வி.எம். மால் முதலில் நிராகரிக்கப்பட்ட ஜெய்சங்கரை "குழந்தையும் தெய்வமும்' என்ற படத்தில் நடிக்க அழைத்தது ஏ.வி.எம்.. ஜமுனா, குட்டி பத்மினி இரட்டை வேடத்தில் நடித்த குழந்தையும் தெய்வமும் வெற்றி விழா கொண்டாடியது. அனல் தெறிக்கும் வசனம், கண்ணீர் சிந்தும் காட்சிகளுடன் ஜெய்சங்கரை அணுகினால் இந்த மாதிரி படத்துக்கு நம்மசிவாஇருக்கிறான் அவனைஅவனை யூஸ் பண்ணுங்க என்று சிவகுமாரின் பக்கம் கையை காட்டி விடுவார். ஜேம்ஸ் பொண்ட் பாணியிலான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார் ஜெய்சங்கர்.
வல்லவன் ஒருவன், களத்தூர் கண்ணாயிரம், ஜக்கம்மா, வல்லவனுக்கு வல்லவன் போன்ற படங்களில் ஆங்கிலப் படநாயகனுக்கு இணையாக நடித்து புகழ்பெற்றார் ஜெய்சங்கர். ஜெய்சங்கரை நம்பி பல தயாரிப்பாளர்கள் உருவானார்கள். யாரும் தோல்வியடைந்ததில்லை. படம் திரையிடப்பட்ட பின்னும் பேசிய பணம் கொடுக்கவில்லை என்றால் அதனைப் பற்றிப் பேச மாட்டார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் ஜெய்சங்கரிடம் படம் வெளியானதால் பிரைடே ஹீரோ என்ற பெயர் பெற்றார்.
ஜெய்சங்கரைச் சுற்றி நண்பர் பட்டாளம் நிறைந்திருக்கும், படப் பிடிப்பிலும் வீட்டிலும் நண்பர்களை உபசரிப்பதில் அவருக்கு நிகர் யாருமில்லை. மேர்ஸி ஹோம் என்ற அனாதை இல்லத்துக்கு நிறைய உதவி செய்தார். ஜெய்சங்கரின் வேண்டுகோளால் அவரது நண்பர்கள் பலர் மேர்ஸி ஹோமுக்கு உதவி செய்தனர்.வியட்னாம் வீடு சுந்தரத்தின் மனைவிக்கு பிரசவ காலம் நெருங்கியது.
அப்போது அவரின் கையில் பணம் இல்லை. இதனை அறிந்த ஜெய்சங்கர் ஒரு தயாரிப்பாளருக்கு போன் செய்து வியட்னாம் வீடு சுந்தரத்துக்கு கதை, சனம் எழுத சந்தர்ப்பம் பெற்றுக் கொடுத்தார். இதேவேளை சுந்தரத்தின் மனைவி அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலைக்கு பணம் அனுப்பினார்.
ரமணி
மித்திரன் 12/04/2009

பெங்களூர் ரோயல் சலஞ்சை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பெற்றது டொக்கான்


கேப் டவுணில் நடைபெற்ற ஐ.பி.எல். 20/ 20 போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான ஐதராபாத் டெக்கான் அணி, பீட்டர்சன் தலைமையிலான பெங்களூர் ரோயல் அணியை 24 ஓட்டங்களினால் வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸிடம் 92 ஓட்டங்களினால் தோல்வியடைந்து ராஜஸ்தான் ரோயலை 75 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற பெங்களூர் ரோயலும், கொல்கத்தாநைட்ரைடரை வீழ்த்திய டெக்கான் சார்ஜஸும் வெற்றியை நோக்கி களமிறங்கின.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெக்கான் சார்ஜஸ், கில்கிறிஸ்ட், ரோகித் சர்மா ஆகியோரின் அதிரடியுடன் 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை எடுத்தது.
பிரவீன் குமார் வீசிய முதல் ஓவரில் மூன்று பௌண்டரிகளை அடித்து தனது விஸ்வரூபத்தை ஆரம்பித்தார் கில்கிறிஸ்ட். கில்கிறிஸ்ட்டை வீழ்த்த முடியாது தவித்த பிரவீன் குமார் எல்.பி.டபிள்யூ மூலம் கிப்ஸை ஆட்டமிழக்கச் செய்து ஆறுதலடைந்தார். ஏழுபந்துகளைச் சந்தித்த கிப்ஸ் ஒரு சிக்ஸர் ஒரு பௌண்டரி மூலம் 13 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய லக்ஷ்மன் ரைடரின் பந்தை ஸ்ரெயினிடம் பிடிகொடுத்து ஐந்து ஓட்டங்களில் வெளியேறினார்.
மூன்றாவது விக்கெட்டில் கில்கிறிஸ்ட் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா தன் பங்குக்கு அதிரடி காட்டினார். இந்த ஜோடி 20 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து எதிரணி வீரர்களை திக்குமுக்காடச் செய்தது.
தன்னை நோக்கி வந்த பந்துகளை பௌண்டரி, சிக்ஸருக்கு விரட்டிய கில்கிறிஸ்ட் பீட்டர்ஸனின் பந்தை கோக்லியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 45 பந்துகளைச் சந்தித்த கில்கிறிஸ்ட் ஆறு சிக்ஸர் ஆறு பௌண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்கள் எடுத்தார்.
கில்கிறிஸ்ட் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸரும் ஊனமடைந்த சிறுவன் ஒருவனுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்பதனால் இந்தத் தொடரில் 25 சிக்ஸர் அடிக்க உத்தேசித்திருப்பதாக கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
ஊனமுற்ற சிறுவர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைத்த பிரத்தியேக பைக் ஒன்றினை கில்கிறிஸ்ட் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் வழங்கப்போவதாக ஆம்வே, ஊனமுற்றோருக்கு தொழில் நுட்ப உதவி வழங்கும் நிறுவனம் ஆகியன அறிவித்துள்ளன.
எட்டு பந்துகளுக்கு முகம் கொடுத்த ஸ்ரெய்ன் ஒரு சிக்ஸர் அடங்கலாக 14 ஒட்டங்கள் எடுத்தார். கில்கிறிஸ்ட் வெளியேறியதும் தனது அதிரடி ஆட்டத்தைக் குறைக்காத ரோகித் சர்மா ஸ்ரெயினின் பந்தை பீட்டர்ஸனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவின்போது டெக்கான் சார்ஜஸ் ஆறு விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்கள் எடுத்தது.
பீட்டர்ஸன் இரண்டு விக்கெட்களை
யும், பிரவீன் குமார், ஸ்ரெயின், ரைடர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
185 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் ரோயல் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்கள் எடுத்தது. ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ஓட்டமெதுவும் எடுக்காது எட்வேட்டின் பந்தில் ஆட்டமிழந்தார்.
கலிஸ் 15, உத்தப்பா 12, பீட்டர்ஸன் 11, ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஐந்தாவது விக்கெட்டில் இணைந்த ட்ராவிட், பிராட்கோக்லி ஜோடி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தி தோல்வியின் ஒட்ட விகிதத்தைக் குறைத்தது.
27 பந்துகளுக்கு முகம் கொடுத்த ட்ராவிட் இரண்டு சிக்கஸர், ஐந்து பௌண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்கள் எடுத்தார். அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த உதவிய கோக்லி 32 பந்துகளுக்கு முகம் கொடுத்து ஏழு பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆறு பந்துகளுக்கு முகம்கொடுத்த பிரவீன்குமார் இரண்டு சிக்ஸர் அடங்கலாக 14 ஓட்டங்கள் எடுத்தார்.
ஸ்ரைஸ் மூன்று விக்கெட்டுகளையும், ஆர்.பி.சிங் இரண்டு விக்கெட்டுகளையும், எட்வேட் ஒஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக கில்கிறிஸ்ட் தெரிவானார்.
ரமணி

Thursday, April 23, 2009

மழையால் பாதிக்கப்பட்ட பிரித்தி ஜிந்தா



பிரபல நடிகையான பிரித்தி ஜிந்தாவின் கிங்ஸ் துடி பஞ்சாப் அணி இரண்டாவது போட்டியிலும் மழை காரணமாக டக்வேர்த் லூயிஸ் முறைப்படி தோல்வியடைந்தது. டில்லி டேர்டெவில்ஸுடனான போட்டியில் மழை காரணமாக 10 ஓட்டங்களினால் தோல்வியடைந்த பஞ்சாப் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.
டெக்கான் சார்ஜஸிடம் 8 விக்கெட்டுகளினால் தோல்வியடைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலாவது வெற்றியைப் பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
ரவி போபராவும் கரன் கோயலும் களமிறங்கினர். கொல்கத்தா அணி ஒன்பது ஓட்டங்கள் எடுத்திருந்தபோது இர்ஷாந்தின் பந்தை கைல்ஸிடம் பிடி கொடுத்து கரன் கோயல் ஓட்டமெதுவும் இன் றி ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய இர்பான் பதான் அதிரடி காட்டினார். 17 பந்துகளைச் சந்தித்த இர்பான் பதான் ஒரு சிக்ஸர் 5 பௌண்டரிகள் அடங்கலாக 32 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கங்குலியின் பந்தை முரளி கார்த்திக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ரவி போபராவுடன் சங்கக்கார இணைந்து விளையாடினார்.
15 பந்துகளில் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 15 ஓட்டங்கள் எடுத்திருந்த ரவி போபரா கங்குலியின் பந்தை அணித் தலைவர் மக்கலமிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். சங்கக்கார, யுவராஜ் சிங் ஜோடி அணியின் ஓட்ட எண்ணிக்கைய உயர்த்தியது. சங்கக்கார ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
24 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 26 ஓட்டங்கள் எடுத்தார்.
யுவராஜுடன் இணை ந்த மஹேலவும் ஜயவர்த்தனவும் தனது அதிரடியை வெளிப்படுத்தினார். 28 பந்துகளைச் சந்தித்த யுவராஜ் சிங் இரண்டு சிக்ஸர் மூன்று பௌண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்கள் எடுத்தார்.
கிங்ஸ் பஞ்சாப்துடி அணி 20 ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை இழந்து 158 ஓட்டங்கள் எடுத்தது. மஹேல ஆட்டமிழக்காது 19 பந்துகளில் ஒரு சிக்ஸர் மூன்று பௌன்டரிகள் அடங்கலாக 31 ஓட்டங்கள் எடுத்தார்.
கங்குலி இரண்டு விக்கெட்டுகளையும் இஷாந்த் ஷர்மா, டின்டா, ஹெரி கியூஸ் ஆகியோர் தலா ஒரு விக்öகட்டையும் கைப்பற்றினர்.
அணித்தலைவர் மக்கலமும் மேற்கிந்திய அணி வீரர் கிறிஸ் கெயிஸ்ஸும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். மழை பெய்யும் சூழ்நிலை இருந்ததனால் இருவரும் இணைந்து அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தனர்.
கைல்ஸ் இரண்டு ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கரன் கோயல் பிடியைத் தவறவிட்டார். இவர்கள் இருவரும் இணைந்து 6.3 ஓவர்களில் 57 ஓட்டங்கள் எடுத்தனர். 10 பந்துகளில் இரண்டு சிக்ஸர், ஒரு பௌண்டரி அடங்கலாக 21 ஓட்டங்கள் எடுத்த மக்கலம் ஆட்டமிழந்தார்.
கெயில்ஸ் 32 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மட்டையில் பட்டு சென்ற பந்தை சங்கக்கார தவறவிட்டதால் இரண்டாவது முறை கண்டத்தில் இருந்து தப்பினார்.
9.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 79 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது.
மழை தொடர்ந்ததனால் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 9.2 ஓவர்களில் கொல்கத்தா அணி 69 ஓட்டங்கள் எடுத்திருந்ததால் வெற்றி பெற போதுமானதாக இருந்தது. கொல்கத்தா அணி 79 ஓட்டங்கள் எடுத்திருந்ததால் 11 ஓட்டங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்ட நாயகனாக கைல்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.
ரமணி

Wednesday, April 22, 2009

பெங்களூர் ரோயலை வீழ்த்தியதுசென்னை சூப்பர் கிங்ஸ் அணி


ஐ.பி.எல். சம்பியனான ராஜஸ்தான் ரோயல்ஸை வீழ்த்திய பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸிடம் வீழ்ந்த சென்னை சூப்பர் கிங்ஸுக் கும் இடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 92 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் டோனி துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.
முதல் போட்டியில் விளையாடிய ஜேக்கப் ஓராம், துஷார ஆகியோர் நீக்கப்பட்டு முரளிதரனும் அல்பி மோர்கனும் சென் னை அணியில் சேர்க்கப்பட்டனர்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய பாத்தீவ் பட்டேலும் ஹைடனும் அதிரடியாக ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். முதல் போட்டியில் ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்த பட்டீல் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார். இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி 10 ஓவர்களில் 100 ஓட்டங்களைக் கடந்தனர். இந்த ஜோடியை பீட்டர்சன் பிரித்தார்.
41 பந்துகளுக்கு முகம் கொடுத்து ஒரு சிக்ஸர், இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக ஓட்டங்கள் எடுத்த பாத்தீவ் பட்டேல் 30 ஓட்டங்களில் பீட்டர்சனின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். பெங்களூர் ரோயல் வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த ஹைடன் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார்.
35 பந்துகளைச் சந்தித்த ஹைடன் இரண்டு சிக்ஸர் ஒன்பது பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ரைனா, டோனி ஜோடியும் பெங்களூர் வீரர்களை திக்குமுக்காடச் செய்தது. 14 பந்துகளுக்கு முகம் கொடுத்த டோனி ஒரு சிக்ஸர் அடங்கலாக 16 ஓட்டங்கள் எடுத்தார். மார்சல் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
பிளின்டொப் ஆட்டமிழக்காது 22 ஓட்டங்கள் எடுத்தார். 13 பந்துகளுக்கு முகம் கொடுத்த பிளின்டொப் ஒரு சிக்ஸர், இரண்டு பௌண்டரி அடங்கலாக 22 ஓட்டங்கள் எடுத்தார்.
பிரவீன் குமார் இரண்டு விக்கட்டுகளையும் ஸ்ரெயின், பீட்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். பெங்களூர் ரோயல் அணி சார்பில் எட்டு வீரர்கள் பந்து வீசினர்.
இவர்கள் 13 உதிரிகளை விட்டுக் கொடுத்தனர். 180ஓட்டம் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் ரோயல் அணி 15.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 87 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பிரவீன் குமார் கோனியின் பந்து வீச்சில் ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார். சென் னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் களத்தடுப்பும் பந்து வீச்சும் சிறப்பாக இருந்ததனால் பெங்களூர் ரோயல் வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தப்பா முரளியின் பந்தை அடிக்க முயன்றபோது டோனியால் ஸ்ரம்ஸ் செய்யப்பட்டார். இவர் 20 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
24 ஓட்டங்கள் எடுத்திருந்த கலிஸ் மார்க்கஸின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் அட்டகாசமாக விளையாடிய டிராவிட் பாலாஜியின் பந்தை பிளின்டொப்பிடம் பிடி கொடுத்து 20 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
18 பந்துகளுக்கு முகம் கொடுத்த டிராவிட் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 20 ஓட்டங்கள் எடுத்தார். 15.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்த பெங்களூர் ரோயல் சலஞ்சர் அணி 87 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.
ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட நான்கு ஓவர்கள் பந்து வீசிய முரளிதரன் 11 ஓட்டங்களைக் கொடுத்து மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார். பாலாஜி இரண்டு விக்கட்களையும் கோனி, மார்க்கல், பிளின் டொப், ஜோஹிந்தர் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக முரளிதரன் தெரிவானார்.
ரமணி

வி.ஐ.பி தொகுதி 7

ப.ம.க நிறுவுனர் ராமதாஸ் நம்பிக்கை வைத்துள்ள வேட்பாளர் பேராசிரியர் ராமாதாஸ். டாக்டர் ராமதாஸுக்கு புதுவைமீது ஒருகண். புதுவையை ஆட்சி செய்யவேண்டும் என்பது டாக்டர் ராமதாஸின் தேராத ஆசை.ஜெயலலிதாவுடன் இணைந்து புதுவையைக்கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. கலைஞருடன் இணைந்து புதுவை நாடாளூமன்ற தொகுதியில்போட்டியிட்டு வெற்றிபெற்றது பா.ம.க. புதுவையில் பா.ம.கவைவீழ்த்த காங்கிரஸ் ஒன்றுபட்டுள்ளது.

Tuesday, April 21, 2009

கொல்கத்தாவை வீழ்த்தியதுடொக்கான் சார்ஜர்ஸ் அணி



கொல்கத்தா நைட்ரைடர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளுக்கிடையே கேப்ரவுணில் நடைபெற்ற ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் எட்டு விக்கெட்டினால் வெற்றி பெற்றது.
நாணயச் சூழ்ச்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைற் ரைடர்ஸ் களத்தடு ப்பை தேர்வு செய்தது.
பயிற்சியாளர் புக்கானுக்கும் அணித்தலைவர் கங்குலிக்குமிடையிலான பிரச்சினை உச்சகட்டமடைந்ததால் மக்கலம் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான மக்கலம், கைல்ஸ் ஆகிய இருவரும் ஏமாற்றினார்கள். ஆர்.பி. சிங்கின் பந்தை கில்கிரிஸ்சிடம் பிடிகொடுத்து ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் மக் கலம்.
12 பந்துகளுக்கு முகம்கொடுத்த கைல்ஸ் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 10 ஓட்டங்கள் எடுத்து ஆர்.பி.சிங்கின் பந்தை ஹமிட்டிடம் பிடிகொடுத்து ஆட்மிழந்தார். முன்னாள் அணித்தலைவர் கங்குலி 12 பந்துகளுக்கு முகம் கொடுத்து ஒரே ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.
சோப்ரா 11, சுக்லா 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பிராட்ஹட்ஜ் ஓரளவு தாக்குபிடித்து 31 ஓட்டங்கள் எடுத்தார். முரளி கார்த்திக் ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்கள் எடுத்தார். ஏனையோர் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தனர்.
3.4 ஓவர்கள் பந்து வீசிய ஆர்.பி.சிங் 22 ஓட்டங்களைக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஓஜா, ஸ்ரைட் ரஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஹமித் சிங் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
102ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் 13.1 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 104 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணித்தலைவர் கில் கிறிஸ்ட் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
10 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி மூலம் 10 ஓட்டங்கள் எடுத்த லக்ஷ்மண் ரன் அவுட் முறையில் ஆட்ட மிழந்தார். கிப்ஸ், ரோகித் சர்மா ஜோடி டெக்கான் சார்ஜர்ஸை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. 28 பந்துகளைச் சந்தித்த கிப்ஸ் ஒரு சிக்ஸர், ஐந்து பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் எடுத்தார்.
37 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரோகித் சர்மா இரண்டு சிக்ஸர் மூன்று பவுண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்கள் எடுத்தார். ஆர்.பி.சி. ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
வானதி


பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி

கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லிடேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையே கேப்டவுணில் நடைபெற்ற மூன்றாவது ஐ.பி.எல். டுவென்டி 20 போட்டியின் போது மழை குழப்பியதால் டெல்லி அணி 10 விக்கெட்டால் வெற்றி பெற்றது.
மழை காரணமாக 1 3/4 மணி நேரம் தாமதமாக போட்டி ஆரம்பமானதால் 12 ஓவர்கள் விளையாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி டோர் டெவில்ஸ் களத் தடுப்பைச் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ஓவர்களில் ஏழு விக்கட்டுகளை இழந்து 104 ஓட்டங்கள் எடுத்தது.
பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரவி போபராவும் கரன்கோயலும் அதிரடியான ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
22 வயதான கரன் கோயலின் ஆட்டம் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. யோமகேஷ் வீசிய பந்தை கரன் கோயல் அடித்தபோது அது மைதானத்துக்கு
வெளியே சென்று வீழ்ந்தது.
இவர்கள் இருவரும் இணைந்து 5.6 ஓவர்களில் 67 ஓட்டங்கள் எடுத்தனர். இந்த ஜோடியை மகேஷ் பிரித்தார். 21 பந்துகளில் மூன்று சிக்ஸர் மூன்று பௌண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்கள் எடுத்த கோயல், யோமகேஷின் பந்தை வெட்டோரியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் அணியின் ஓட்ட எண்ணிக்கையை வெட்டோரி கட்டுப்படுத்தினார். வெட்டோரி முதலாவது ஓவரின் ரவிபோபராவை எல்.பி.டபிள்யூ. மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். 16 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரவி போபரா இரண்டு சிக்ஸர்கள் அடங்
கலாக 22 ஓட்டங்கள் எடுத்தார். 19, 21 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது போபராவின் பிடியை டெல்லி அணி வீரர்கள் தவறவிட்டனர். வெட்டோரியின் இரண்டாவது ஓவரில் எட்டு ஓட்டங்கள் எடுத்திருந்த சங்ககார ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரில் ஆறு ஒட்டங்கள் எடுத்த
மஹேல ஆட்டமிழந்தார். அணி தலைவர் யுவராஜ் சிங் 11 ஓவர்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். சௌலாவும் ரன் அவுட் முறையில் ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார். 12 ஓவர்களில் ஏழு விக்கட்டுகளை இழந்த பஞ்சாப் 104 ஓட்டங்கள் எடுத்தது.
மூன்று ஓவர்கள் பந்து வீசிய வெட்டோரி 15 ஓட்டங்களைக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். யோகேஷ் சால்வி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
105 ஓட்ட எண்ணிக்கையுடன் களமிறங்கிய டெல்லி டேர் டெவில்ஸ் 4.5 ஓவர்களில் விக்öகட் இழப்பின்றி 58 ஓட்டங்களை எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 10 விக்öகட்டுகளினால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஷெவாக் கம்பீர் அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்தனர். 1.5 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 24 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை மீண்டும் குறுக்கிட்டது.
டக்வேர்ட் லூயிஸ் முறைப்படி ஆறு ஓவர்களில் 54 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 25 பந்துகளில் 30 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்குடன் களமிறங்கிய ஷொவாக்கும் கம்பீரும் 4.5 ஓவர்களில் 58 ஓட்டங்கள் எடுத்து வெற்றியைத் தேடிக் கொடுத்தனர்.
கம்பீர் 15 ஓட்டங்களையும் ஷெவாக் 38 ஓட்டங்களையும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக வெட்டோரி தெரிவு செய்யப்பட்டார்.
ரமணி

வி.ஐ.பி தொகுதி 6


தி.மு.கவின் நட்சத்திரவேட்பாளர் போட்டியிடும் தொகுதி மதுரை.மதுரை என்றால் அழகிரி அழகிரி என்றால் மதுரை என்பதே தி.மு.கவின் பஞ்டயலக்.அழகிரியின் எதிர்ப்பைத்தாங்கமாட்டாத தி.மு.க மதுரயில் தோல்வியடைந்தது ஒருகாலம்.எந்த எதிர்ப்பையும்சமாளித்து வெற்றிபெறும் நம்பிகையில் உள்ளார் அழகிரி.

Monday, April 20, 2009

வி.ஐ.பிதொகுதி 5


இந்திய அரசியலில் புகழ்பெற்ற அரசியல்வாதிகளில் ஒருவரான ப.சிதம்பரம் போட்டியிடும் சிவகங்கை தொகுதி அனைவரின் கவனத்தியும் ஈர்த்துள்ளது.தொண்டர்களூடன் அதிகம் பழகாத இவர் தேர்தலில் ஜெயிக்கும் கலை அறிந்தவர்.நிதி அமைச்சராகஇருந்தபோது பலசிக்ககளை எதிர்நோக்கியவர்.பேச்சாற்றலால் கவர்வது இவரின் பலம்.

வீழ்ந்தது ஐ.பி.எல் சம்பியன்



தென் ஆபிரிக்காவில் நடைபெறும் இரண்டாவது ஐ.பி.எல். கூதீஞுணtதூ 20 போட்டியில் ஐ.பி.எல். சம்பியனான ராஜஸ்தான் ரோயல்ஸும் ரன்னரான சென்னை சுப்பர் கிங்ஸும் பரிதாபமாக தோல்வியைத் தழுவின.
கேப்டவுனில் நடந்த முதலாவது போட்டியின் சென்னை சூப்பர் கிங்ஸ் 75 ஓட்டங்களினால் மும்பை இந்தியன்ஸிடம் தோல்வியடைந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
அபிஷேக் நாயரின் அதிரடியும் மாலிங்கவின் பந்து வீச்சும் மும்பை இந்தியனுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது.
அனுபவம் உள்ள ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சனத் ஜயசூரியவும் சச்சின் டெண்டுல்கரும் இணைந்து 5.5 ஓவர்களில் 39 ஓட்டங்கள் எடுத்தனர். முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விளையாடிய துஷார, ஜெயசூரியவை ஆட்டமிழக்கச் செய்து முதலாவது விக்கெட்டை வீழ்த்தினார். 20 பந்துகளுக்கும் முகம் கொடுத்த ஜயசூரிய 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
10 ஓட்டங்கள் எடுத்திருந்த சச்சின் டெண்டுல்கரின் இலகுவான பிடியைத் தவறவிட்ட ஹைடன், ஜயசூர்ய அடித்த பந்தைப் பிடித்து பரிகாரம் தேடினார். அடுத்து களமிறங்கிய தவான் 21 பந்துகளில் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 22 ஓட்டங்கள் எடுத்தபோது கோனியின் பந்தை டோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். பார்தீவ் பட்டேல் விக்கெட் கீப்பராக கடமையாற்றினார்.
அடுத்து களமிறங்கிய டுமினி 7 ஓட்டங்கள் எடுத்தபோது கோனி வீசிய பந்தை அவரிடமிமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். பிராவோ ஐந்து ஓட்டங்களில் சர்மாவின் பந்தை ஹைடனிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். மும்பை இந்தியன்ஸ் முதலாவது விக்கெட்டை 39 ஓட்டங்களிலும், இரண்டாவது விக்கெட்டை 82 ஓட்டங்களிலும் மூன்றாவது விக்கெட்டை 95 ஓட்டங்களிலும் நான்காவது விக்கெட்டை 102 ஓட்டங்களிலும் இழந்து தடுமாறியபோது களத்தில் புகுந்த அபிஷேக் நாயர் கதகளி ஆடி மும்பை அணிக்கு உயிரூட்டினார். 14 ஓவர்களில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கப்படவில்லை என்று வெறுப்படைந்திருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் நாயர். பிளின்டொப்பின் ஓவரில் இரண்டு சிக்ஸர் அடித்து ரசிர்களை குதூகலப்படுத்தினார்.
14 பந்துகளைச் சந்தித்த நாயர் மூன்று சிக்ஸர் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்கள் எடுத்தார். ஓரமின் பந்தை துஷாரவிடம் பிடிகொடுத்து நாயர் ஆட்டமிழந்தபோது மும்பை அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்கள் எடுத்தது.
மும்பை வீரர்கள் ஆட்டமிழந்து கொண்டிருந்தபோது மும்பை இந்தியனின் அணித்தலைவரான சச்சின் டெண்டுல்கர் மறுமுனையில் நின்று அரைச்சதம் கடந்தார்.
ஹர்பஜன் ஒரே ஒரு பௌண்டரியுடன் ஆட்டம் இழந்தார். சஹிர்கான் இரண்டு ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சச்சின் ஆட்டமிழக்காது 59 ஓட்டங்கள் எடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் ஏழு விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்கள் எடுத்தது.
நான்கு ஓவர்கள் பந்து வீசிய கோனி 32 ஓட்டங்களை கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். நான்கு ஓவர்கள் பந்து வீசிய துஷார 32 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 4 ஓவர்கள் பந்துவீசிய பிளின்டொப் 44 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். நான்கு ஓவர்கள் பந்து வீசிய ஓராம் 30 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். நான்கு ஓவர்கள் பந்து வீசிய ஜோ ஹிந்தர் சம்மா 25 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
166 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாவது பந்தில் பர்த்தீப் பட்டேலை இழந்தது. மலிங்க வீசிய பந்தை ஸ்லிப்பில் சச்சினிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார் பார்தீப் பட்டேல்.
நம்பிக்கையுடன் களமிறங்கிய ரெய்னா எட்டு ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
பிளின்டொப், ஹைடன் ஜோடி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு உயிரூட்ட முயற்சித்தது. இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்காக பாடுபட்டனர். 23 பந்துகளைச் சந்தித்த பிளின்டொப் ஒரு சிக்ஸர் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 24 ஓட்டங்கள் எடுத்தபோது ஹர்பஜனின் பந்தை அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
ஹைடன் 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் ஆட்டமிழந்ததும் மும்பையின் வெற்றி உறுதியாகியது.
டோனி 36, ஓராம் 6 ஓட்டங்களை எடுத்தனர். 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்கள் எடுத்தது. மாலிங்க, சஹீர்கான், பிராவோ, ஜயசூரிய ஆகியோர் தலா நான்கு ஓவர்கள் பந்து வீசினர்.
15 ஓட்டங்களைக் கொடுத்த மாலிங்க மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 34 ஓட்டங்களை கொடுத்த சஹீர்கான் விக்கெட் எதனையும் வீழ்த்தவில்லை. 27 ஓட்டங்களை கொடுத்த பிராவோ 2 விக்கெட்டை வீழ்த்தினார். 34 ஓட்டங்களைக் கொடுத்த ஜயசூரிய இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டார்.
கேப்டவுனில் நடந்த இரண்டாவது போட்டியில் ஐ.பி.எல் சம்பியனான ராஜஸ்தான் ரோயல்ஸ் கும்ப்ளேயின் மாயாஜால பந்து வீச்சில் தோல்வி அடைந்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் ரோயல் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்து முதலில் துடுப்பெடுத்தாடியது. பீட்டர்சன்னின் தலைமையில் களமிறங்கிய பெங்களூர் ரோயல் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்கள் எடுத்தது.
பெங்களூர் ரோயல்ஸின் மூன்று விக்கெட்டையும் மாஸ்கரனாஸ் வீழ்த்தி அதிர்ச்சியளித்தார் ரைடர் 0, தவ்லர் 0, உத்தப்பா 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததும் களமிறங்கிய தலைவர் பீட்டர்ஸனும் முன்னாள் தலைவர் ட்ராவிட்டும் இணைந்து சரிவிலிருந்து மீட்டனர். 30 பந்துகளைச் சந்தித்த பீட்டர்சன் 32 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கோல்கி மூன்று ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அகில் 9, பிரவீன்குமார் 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர் 48 பந்துகளுக்கு முகம் கொடுத்த ட்ராவிட் ஒரு சிக்சர் 8 பவுண்டரிகள் அடங்கான 66 ஓட்டங்கள் எடுத்தார். ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்கள் எடுத்தது.
மஸ்கரனாஸ் மூன்று விக்கெட்டுகளையும் முனாவ்பட்டேல், ஷேன் வோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். ஹெண்டர்சன் ஒரு விக்கெடை வீழ்த்தினார்.
ஐ.பி.எல். சம்பியனான ராஜஸ்தான் ரோயல் 15.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 58 ஓட்டங்களை மட்டுமே எடுத்து பரிதாபமாக தோல்வியடைந்தது.
ஹெண்டர்சன், யூசுப் பதான், ஜடேஜா ஆகியோர் அதிகபட்சமாக 11 ஓட்டங்கள் எடுத்தனர். மூன்று பேர் ஓட்ட மெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தனர். ஏனையோர் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர்.
3.1 ஓவர்கள் பந்து வீசிய அனில் கும்ப்ளே ஐந்து ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரைடர், பிரவீன்குமார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக ட்ராவிட் தெரிவு செய்யப்பட்டார்.
முதல் நாள் நடந்த போட்டியில் முத்திரை பதித்த டெண்டுல்கர், ட்ராவிட், கும்ளே ஆகிய மூவரும் சர்வதேச twenty 20 போட்டியில் இருந்து ஒதுங்கியவர்கள் ஆவர்

Sunday, April 19, 2009

வி.ஐ.பி தொகுதி 4


பாட்டாளிமக்கள்கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸின் நம்பிக்கைக்குப்பாத்திரமான குரு திருவண்ணாமலையில் போட்டியிடுகிறார்.சும்மாகுருஎன்றால் யாருக்கும் தெரியாது. காடுவெட்டிகுரு என்றால்தான் அனைவருக்கும் தெரியும். காடுவெட்டுகுரு தோல்வியடைந்தால் ராமதாசுக்கு அவமானம் என்பதால் தி.மு.கவும்,காங்கிரஸும் கைகோர்த்து பரசாரம் செய்கின்றன. ரஜினியின் "பாபா" படத்தைத்திரையிடுவதற்கு பா.மா.க காட்டிய எதிர்ப்புக்கு முன்னணி வகுத்தவர் காடுவெட்டிகுரு. ஆகையினால் ரஜினி ரசிகர்களும் எதிர்ப்புக்காட்டுவார்கள்

குழப்பத்தில் கூட்டணி தயக்கத்தில் ஜெயலலிதா

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான முறுகல் நிலை இன்னமும் தீரவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒதுக்கிய நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை முடிந்ததும் இரு கட்சித் தலைவர்களும் பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் ஒன்றாக நின்று சிரித்துக் கொண்டு காட்சியளிப்பது வழமை. கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சியின் தலைவரைச் சந்தித்து ஆசி பெறுவது சம்பிரதாயம்.
கூட்டணிக் கட்சிகளிடையே உள்ள வழமையையும் சம்பிரதாயங்களையும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கடைப்பிடிக்கவில்லை.தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும் வைகோவும் ஒன்றாகக் கையெழுத்திடவில்லை. வைகோவும் ஜெயலலிதாவும் சந்தித்து ஒரு மாதத்துக்கு மேலாகி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை இரண்டு பேரும் மறுக்கவில்லை. ஆகையினால் அந்தச் செய்தி உண்மைதான் என்று உறுதிபடத் தெரிகிறது.
கலைஞர் கருணõநிதி ஒரு தொகுதியை கூடுதலாகக் கொடுக்காததால் கோபித்துக் கொண்டு ஜெயலலிதாவிடம் தஞ்சமடைந்த வைகோ இன்று வரை ஜெயலலிதாவுக்கு விசுவாசமாகவே உள்ளார். ஆனால், ஜெயலலிதாவோ அந்த விசுவாசத்துக்கு கொஞ்சமும் மதிப்புக் கொடுக்காது காரியமாற்றுகிறார்.
வைகோ ஆறு தொகுதிகள் கேட்டபோது நான்கு தொகுதிகளை மட்டுமே ஜெயலலிதா கொடுத்துள்ளார். இரண்டு தொகுதிகள் குறைத்துக் கொடுக்கப்பட்ட போதும் அங்கிருந்து வெளியேற முடியாத சூழ்நிலைக் கைதியாகவுள் ளார் வைகோ.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியிலிருந்து வைகோ வெளியேறினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வெற்றி இலகுவாகி விடும் என்பதனால் ஜெயலலிதாவின் சர்வாதிகாரத்துக்கு கட்டுப்பட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் வைகோ.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இருந்து வைகோ வெளியேற வேண்டும் என்பதையே தமிழக முதல்வர் எதிர்பார்க்கின்றார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் வைகோ தொடர்ந்தும் இருப்பதனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான பிரசாரம் உத்வேகம் பெற்றுள்ளது.
கூட்டணிக் கட்சித் தலைவர்களை அலட்சியப்படுத்துவதில் ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதா தான். கடந்த தமிழக சட்ட மன்றத் தேர்தலில் வைகோவும் ஜெயலலிதாவும் ஒரே மேடையில் ஏறிப் பிரசாரம் செய்யவில்லை. காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்த போதும் ஜெயலலிதா காங்கிரஸ் தலைவி சோனியாவைக் கண்டு கொள்ளவில்லை. அதேபோன்று தான் வைகோவுடனும் நடந்துகொண்டார். அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் ஜெயலலிதாவுடன் –வைகோ மேடையில் அமர்ந்தார். எனினும் வைகோவின் தேர்தல் பிரசாரத்திற்கு ஜெயலலிதா செல்வாரா என்ற சந்தேகம்
உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்தபோது தனக்கு ஒதுக்கப்பட்ட நான்கு தொகுதிகளிலும் வைகோவின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். இப்போதும் நான்கு தொகுதிகள்தான் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நான்கிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் வைகோ. ஒரு தொகுதியில் தோல்வியடைந்தாலும் அவரது அரசியல் எதிர்காலம் சிக்கல் நிறைந்ததாகி விடும்.

திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல் கட்சியில் உள்ள ஒரு சிலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பழைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் எட்டுப் பேருக்கு மட்டுமே மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 13 பேரும் புதுமுகங்கள். கட்சியில் ஈடுபõடு இல்லாதவர்களுக்கும் செல்வாக்கு இல்லாதவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஒரு சிலர் குமுறுகின்றனர். பழையவர்களை விட புதியவர்கள் உற்சாகத்துடன் காரியமாற்றுவார்கள் என்ற நம்பிக்கை தி.மு.க. தலைமைக்கு இருப்பதால் புதியவர்களுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தாவி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த செஞ்சி ராமச்சந்திரன், எல். கணேசன் ஆகிய இருவரும் தமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று ஏமாந்து போனார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திரõவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளும் முஸ்லிம்களுக்கு ஒரு தொகுதியைக் கூட ஒதுக்கவில்லை. முஸ்லிம் வேட்பாளர்களை இவை நிறுத்தாததால் முஸ்லிம்கள் வெறுப்புற்றுள்ளனர். காலந் தாழ்த்தி இதனை உணர்ந்த ஜெயலலிதா மத்திய சென்னை வேட்பாளரான எஸ்.எஸ். சந்திரனை நீக்கி விட்டு முஹம்மது அலி ஜின்னாவை வேட்பாளராக அறிவித்துள்ளார்.
மத்திய சென்னையில் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிடுவதற்கு தயங்கிய எஸ்.எஸ். சந்திரனை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதனால் அங்கு முஸ்லிம் ஒருவரை வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா. முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ள மத்திய சென்னையில் தயாநிதி மாறனுக்கு போட்டியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக முஸ்லிம் வேட்பாளரை ஜெயலலிதா களத்தில் இறக்கியுள்ளார். மூன்று வேட்பாளர்களை அதிரடியாக மாற்றிய ஜெயலலிதா, இப்போது நான்காவது வேட்பாளøரயும் மாற்றியுள்ளார். வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்னர் அதனை வாபஸ் பெற வைத்தவர் ஜெயலலிதா.
அவரது அதிரடி அரசியலால் கலங்கிப் போயுள்ளனர் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழக வேட்பாளர்கள்மாற்றம், வைகோவுடனான முறுகல் போன்றவற்றினால் ஜெயலலிதா குழம்பியிருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியை தோல்வியடையச் செய்யலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார்
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 19/04/2009

Friday, April 17, 2009

வி.ஐ.பி தொகுதி 3


திருமாவளவனுக்கு எதிராக காங்கிரஸ்கட்சியின் தமிழகத்தலைவர்கள் கொதித்து எழுந்தபோது அவர்களை அமைதிப்படுத்தி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி எமது அணியில் உள்ளது எனக்கூறி திருமாவளவனை உற்சாகப்படுத்தினார் முதல்வர் கருணாநிதி.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் அவரை வீழ்த்த கங்கணம் கட்டிஉள்ளார் பா.ம.க நிறுவுனர் டாக்டர் ராமதாஸ்.இலங்கைப்பிரச்சினையில் இந்திய அரசுதலையிடவேண்டும் என ஒரே மேடையில் முழங்கிய பா.ம.கவும் விடுதலைச்சிறுத்தைகளூம் நேருக்குநேர் மோதுவதால் சிதம்பரம் தொகுதி பரபரப்பாகவுள்ளது.

Thursday, April 16, 2009

வி.ஐ.பி தொகுதி 2


தமிழகமுதல்வரின் மனச்சாட்சியான முரசொலிமாறன் மறைந்ததும் அவர்மகன் தயாநிதிமாறன் கெட்டியாகப்பிடித்ததொகுதி மத்தியசென்னை. முதல்வர்குடும்பத்துக்கும் மாறன்குடும்பத்துக்குமிடயில் பிரச்சினை ஏற்பட்டபோதெல்லாம் தயாநிதிமாறனைப்பற்றியவதந்தி பரபரப்பாகப்பரவியது.
மதுரையில் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு உயிர்கள்காவிகொள்ளப்பட்டபோதும், சன் தொலைக்காட்சிக்குப்போட்டியாக கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டபோதும், கவிதைகளால் குத்திப்புண்ணாக்கியபோதும் பொறுமைகாத்தது மாறன்குடும்பம்.தயாநிதிமாறனுக்குப்போட்டியாகஎஸ்.எஸ். சந்திரனை அறிவித்தார் ஜெயலலிதா.தயாநிதிமாறனுடன் போட்டியிடத்தயங்கினார் எஸ்.எஸ்.சந்திரன்.ஜெயலலிதாவின் வழக்கமானபாணியில் வேட்பாளர்மாற்றப்பட்டு முஹமது அலி ஜின்னா வேட்பாளராக
அறிவிக்கப்பட்டார்.

Wednesday, April 15, 2009

வி.ஐ.பி தொகுதி 1



கர்மவீரர் காமராஜரை குப்புறவிழுத்தியதொகுதி.தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைக்கொண்டுவரப்போவதாக சபதமிடும் தமிழககாங்கிரஸ் தலைவர்கள் விருதுநகர் என்ற இத்தொகுதியை மறந்துவிட்டனர். விருதுநகர் எமக்குவேண்டும் என அடம்பிடித்த காமராஜர்பக்தர்களின் கோரிக்கைக்குசெவிசாய்த்த தி.மு.க விருதுநகரை விட்டுக்கொடுத்தது. வைகோ விருதுநகரில் போட்டியிடுவதால் காங்கிரஸ்காரர்கள் கலக்கத்தில் உள்ளனர்.உலகத்தின்பார்வை விருதுநகரில் உள்ளது.

Sunday, April 12, 2009

வைகோவின் பொறுமையும்ஜெயலலிதாவின் அலட்சியமும்


ராமதாஸ், தா. பாண்டியன், என். வரதராஜன் ஆகியோர் கலைஞர் கருணாநிதி தலைமையில் காங்கிரஸின் கையை பலப்படுத்தியபோது ஜெயலலிதாவுடன் இணைந்து இரட்டை இலைகளில் ஒன்றாய் மிளிர்கின்ற வைகோ பின்னர் ராமதாஸ், தா. பாண்டியன், என். வரதராஜன் ஆகியோர் முதல்வரின் தலைமையிலான கையை உதறிவிட்டு இரட்டை இலையில் ஒட்டிக் கொண்டதும் வைகோவின் மீது வைத்திருந்த மதிப்பை ஜெயலலிதா குறைத்தார்.
வைகோவின் ஒப்புதல் இல்லாமல் ஒருதலைப்பட்சமõக ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட தொகுதிப் பங்கீடு இருவருக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. ஐந்து வருடங்கள் மத்திய அரசில் அமைச்சராகப் பவனி வந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோது தனது செல்வாக்குக்கு பங்கம் வராது அதிக தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று வைகோ எதிர்பார்த்தார். வைகோவுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் பின்னர் மனமிரங்கி ஒரு தொகுதி கூடுதலாக நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் அறிந்து வைகோ மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களும் அதிர்ந்து விட்டனர்.
புரட்சிப் புயலான வைகோவை ஜெயலலிதா அவமானப்படுத்தியதாகவே வைகோவின் மீது மதிப்பு வைத்திருப்பவர்கள் கருதுகிறார்கள். எளிதில் உணர்ச்சிவசப்படும் வைகோ என்ன செய்வதெனத் தெரியாது தடுமாறுகிறார்.
ஜெயலலிதாவே எனது முதல் எதிரி, வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்ற கோஷங்களுடன் 1993ஆம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்த வைகோ பின்னர் ஜெயலலிதாவிடமும் கலைஞர் கருணாநிதியிடமும் சரணடைந்து தனது கட்சியை வளர்க்க முயற்சி செய்தார்.
வைகோவின் அனல் பறக்கும் பிரசாரம் தேவைப்பட்டபோது அவரை அரவணைத்த கலைஞர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் தமது தேவை முடிந்ததும் அவரை ஒதுக்கினார்கள். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளை எதிர்த்து அரசியல் நடத்த முடியாத வைகோ, காலப்போக்கில் இரண்டு கட்சிகளையும் அனுசரித்துப் போகக் கற்றுக் கொண்டார். தனது சுய மரியாதைக்கு களங்கம் ஏற்படும்போது அதிரடியாக வெளியேறிய வைகோ இப்போது காட்டும் பொறுமையை தனக்கு சாதகமாக மாற்றியுள்ளார் ஜெயலலிதா.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஆகியவற்றின் மீது வெறுப்படைந்தவர்களின் வாக்குகளைக் கவரும் சக்தி வைகோவுக்கு உள்ளது. ஆகையினால் கூட்டணியில் அவர் நீடிக்க வேண்டும் என்று ராமதாஸ், தா. பாண்டியன், என். வரதராஜன் ஆகியோர் கருதுகின்றனர்.
வைகோவுக்கு தமிழகத்தின் மத்தியில் மதிப்பும் மரியாதையும் உள்ளது. அவரது அரசியல் நேர்மையில் யாரும் சந்தேகப்பட முடியாது. ஆனால், அவரது கட்சி வாக்கு வீகிதம் குறைந்து வருவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ வெளியேறியபோது அவருடன் வெளியேறியவர்களில் பலர் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சென்றடைந்ததும் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதனால் அவருக்கான தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன.
நேர்மையான அரசியல்வாதியான வைகோவினால் டாக்டர் ராமதாஸைப் போன்று அரசியல் ராஜதந்திரத்தின் மூலம் காய்களை நகர்த்தத் தெரியாததால் அவருடன் இருந்தவர்கள் அவரை விட்டு வெளியேறி விட்டனர்.
கொலை அச்சுறுத்தல் விடுத்து பிணையில் வெளிவர முடியாத வகையில் கைது செய்யப்பட்ட காடு வெட்டி குருவை பிணையில் விடுதலை செய்வதற்கான சூழøல உருவாக்கிய டாக்டர் ராமதாஸ் போன்று செயற்பட வைகோவால் முடியாது.
முதல்வர் கருணாநிதியுடன் சேர்ந்து இரட்டைக் குழல் துப்பாக்கி போல் செயற்பட்ட வைகோ இப்போது இரட்டை இலைகளில் ஒன்றாக மாறிவிட்டார். இரட்டை இலையை விட்டு வைகோ வெளியேறினால் அவரை தாமரையில் வைத்து அழகுபார்க்க பாரதிய ஜனதாக் கட்சி தயாராக இருக்கிறது.
வைகோவுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜெயலலிதா மார்க்சிஸ்ட் ஒருவருக்கு அதிர்ச்சியளித்தார். வேட்பாளர்களை அறிவிப்பதற்காக தமது தொகுதிகள் எவை என்று கூறும்படி மார்க்சிஸ்ட்கள் நெருக்கடி கொடுத்தனர். அதனை பெரிதாக எடுக்காத ஜெயலலிதா லாவகமாக தொகுதிகளை அறிவித்தார். ஜெயலலிதா தொகுதிகளை அறிவிக்காததனால் மத்திய குழுக் கூட்டத்தை மார்க்சிஸ்ட்கள் ஒத்தி வைத்தனர்.
தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்க முன்னமே தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினை ஆரம்பமாகி விட்டது. இத்தனை களேபரத்தின் மத்தியில் நடைபெறப் போகும் தேர்தல் பிரசாரம் ஒரே குரலில் இருக்குமா என்ற சந்தேகம் தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கட்சிகள் கூட்டணிக் குழப்பத்தில் தவிக்க முதல்வர் கருணாநிதி சுமுகமாக கூட்டணிக் கட்சிகளுக்குரிய தொகுதிகளை அறிவித்ததுடன் தனது மகன் அழகிரியையும் வேட்பாளராக்கி விட்டார்.
தன் அன்பு மகனுக்காகவே மதுரையை கையிலெடுத்துள்ள முதல்வர் கருணாநிதி ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே பிரச்சினை அடுத்த முதல்வர் அழகிரியா, ஸ்டாலினா என்ற பட்டிமன்றம் கழகத்துக்குள் கிலியை ஏற்படுத்தியது. அழகிரி நாடாளுமன்ற வேட்பாளரானதால் இந்தப் பிரச்சினைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அதி கவனத்திற்கு உரியதொரு தொகுதியாக மதுரை மாறியுள்ளது. அழகிரியின் வெற்றியை தடுப்பதற்கு தன்னாலான சகல முயற்சிகளையும் செய்வதற்கு ஜெயலலிதா தயாராக உள்ளார். மதுரையின் நிழல் முதல்வராக இருக்கும் அழகிரி சரியான பதிலடி கொடுப்பார் என அவரது உடன் பிறப்புகள் கருதுகின்றனர்
வர்மா
.வீரகேசரி 12/04/2009

Friday, April 10, 2009

வடக்கேபோகும்மெயில்


கோட்டைரயில்நிலையத்தில் வடக்கேபோகும் மெயில்வண்டிக்கு வழக்கத்திலும் மாறாக அதிகம்பேர் காத்திருக்கின்றனர்.மாலை ஏழு மணிக்குவெளிக்கிடவேண்டிய ரயில் வண்டி ஒருமணித்தியாலம் தாமதமாக வெளிக்கிட்டது.வழி அனுப்பவந்தவர்கள் ரயிலுடன் சேர்ந்துஓடிப்பிரியமனமில்லாமல் மறையும்வரை கை அசைத்துவிடைகொடுத்தனர்.
விடுமுறையை யாழ்ப்பாணத்தில் கழிப்பதற்காகச் செல்பவர்கள்விடுமுறையில் எங்கெங்குபோகவேண்டுமென்று அருகில் இருந்தவர்களுக்குச்சொன்னார்கள்.
கோயில் திருவிழாவுக்குச்செல்லும்பெண்மணிகள் புதிதாக எடுத்தசேலைகளினதும்,செய்வித்த நகைகளினதும்பெறுமதிகளை கொஞ்சம் கூடுதலாகவே,கேட்பவர்கள் பொறாமைப்படக்கூடிய விதத்தில் சொன்னார்கள்.
திருமணத்திற்காகச்செல்பவர்கள்.மாப்பிள்ளயின் திறமை,பொம்பிளையின் வடிவு என்பனவற்றை அளவுக்கதிகமாகஅளந்தார்கள்.
உறவுமுறையானவர் இறந்துவிட்டார். இறுதிக்கிரியையில் கலந்துகொள்ளவேண்டும்.எனக்காகப்பிரேதத்தை வைப்பார்களாஎனயோசிக்கிறார் மரணவீட்டுக்குச்செல்லும் ஒருவர்.
புதினம்பார்த்தசிறுபிள்ளைகள் தூங்கஆரம்பித்துவிட்டனர். பெரியவர்களின் பேச்சுச்சத்தமும் வரவரகுறைந்துகொண்டுபோனது.
இப்போ அதிகமானோர் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டனர். சிலர் குறைத்தூக்கத்தில் அடுத்தவரின் மேல் சரிந்து அப்படியே தூங்கிவிட்டனர்.இன்னும் சிலர் கண்ணைவெட்டிவெட்டி நித்திரையைப் போக்கமுயன்று முடிவில் நித்திரா தேவியின் அரவணைப்புக்கு அடிமையாகி விட்டனர்.
எஞ்சி இருப்போர் நித்திரைகொள்ளாமல் இருப்பதற்காகசிகரெட் புகைத்தும்,வெற்றிலைசப்பியும்,இங்குமங்குமாகநடந்தனர்.

பொல்காவலை சந்தியில் ரயில் நின்றதும் அனேகமானோர் விழித்துக்கொண்டனர்.கண்டியிலிருந்துவந்தவர்கள் இடம் தேடிஅலைந்தனர்.வசதியானஇடம் கிடைக்காதா என்றநப்பாசையில் சிலர் ஒவ்வொருபெட்டியாகச்சோதனையிட்டனர்.விழிப்பாகஇருந்தஒருவர்,தன்னைக்கொஞ்சம் தள்ளி இருக்கும்படி சொல்லுவார்களோ எனப்பயந்து கண்ணை மூடிக்கொண்டிருந்தார்.
"சார் கொஞ்சம் காலை எடுங்கபெட்டியை வைப்பம்"
தூக்கத்தில் இருந்தவரை எழுப்பிதனது பெட்டியை ஆசனத்துக்குக்கீழே ஒருவர் வைத்தார்.நித்திரையால் எழுப்பியவரை எரிப்பதுபோல் பார்த்துவிட்டுமீண்டும் தூங்கஆரம்பித்தார்.
கோணர் சேற்றில் இருந்தஒருவர் அப்பொழுதுதான்விழித்துப்பார்த்தார்.தனதுமனைவியின் மேல் இன்னொருவர் சாய்ந்தபடி நிம்மதியாக உறங்கிக்கொண்டிருப்பதைக்கண்டார். உடனே எழுந்து தனது மனைவியை எழுப்பிகோணர் சீற்றில் இருத்திவிட்டு அவருக்கும் மனைவிக்கும் இடையில் இருந்துமனைவியின் மேல் சாய்ந்தபடிநிம்மதியாகத்தூங்கஆரம்பித்தார்.
பேராதனையில் இருந்துவந்தமாணவர்கோஷ்டி ஏறியரயில் பெட்டி ஒன்று மிகவும் கலகலப்பாகியது.இவர்களின் கலகலப்பால்ரயில் வண்டியின் சத்தம் கேட்கவில்லை.ஆடிப்பாடியகளைப்பால் மாணவர்கோஷ்டிதூங்கஆரம்பித்தது.
இப்போ ரயிலின் கடபுடாசத்தம் வெகு துல்லியமாகக்கேட்டது.மீண்டும் ஒரே அமைதி நித்திரையில் இருந்துவிடுபட்டவர்கள்நித்திரையாகினர். புதிதாகஏறியவர்கள் நின்று கொண்டும் இருந்து கொண்டும் தூங்கிவிட்டனர். நள்ளிரவு இரண்டுமணிஅனுராதபுரம்நெருங்கிக்கொண்டிருக்கிறது.இறங்க வேண்டியவர்கள் ஆயத்தமானர்கள்.அன்று அனுராதபுரநகரமே ஸ்ரேசனில் திரண்டிடுந்ததுபோல்மக்கள்வெள்ளம்நிரம்பி வழிந்தது.ரயில் நின்றதும்ஸ்ரேசனில் நின்றவர்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள்.
எங்கும் ஒரே அமளி ஏறியவர்கள் அனைவரினதும் கைகளில் பயங்கர ஆயுதங்கள்.அவர்கள் பிரயாணிகளைத்தாக்கினார்கள்.தாக்குதலைஎதிர் பார்க்காதபிரயாணிகள் என்னசெய்வதெனத்தெரியாது தவித்தனர்.உறங்கியவர்கள் அடிவிழுந்ததும் திடுக்கிட்டு விழித்தனர்.ஒருசிலர் ரயிலை விட்டு இறங்கி இருளில் பாதைதெரியாது ஓடினர்.
ரயிலில் வந்த சில விலாங்குகள் தாக்கியவர்களின்பாஷையில் அவர்களைப்போன்று "விடாதே,வெட்டு,கொத்து"எனக் கோஷித்தனர்.
இரண்டு மணித்தியாலத்துக்குக் கொலையும்,கொள்ளையும் நடந்தன.ஒருவரைச்சூழ ஐம்பது நபர்கள் நின்று தாக்கினால் அந்த ஒருவரால் எவ்வளவு நேரத்துக்குத் தாக்குப்பிடிக்கமுடியும்.
கொள்ளைக்காரர்களில் ஒருவன்"எடே மச்சான் அந்த டைம்பாம் எங்கே?" எனக்கேட்டான்.
"அதைத்தான் நானும்தேடுறன்.இருட்டிலை எங்கையோ வெச்சிட்டன்"எனஅடுத்தவன் சொன்னான்.
தன் இனத்தையே வெறுத்து ஒதுக்கியஇனத்தை இன்னொரு இனம் அழித்துக்கொண்டிருக்கிறது.
கொள்ளையடித்த பணம்,நகை.உடுதுணி என்பனகொள்ளையரின் ஏழு தலைமுறைக்குப்போதுமானது.வண்டி நகரத்தொடங்கியது.சந்தோசமாகப்பயணத்தை ஆரம்பித்தவர்கள்பாதியில் படுசோகத்துடன் பயணமகிறார்கள்.செய்திகளையும்,கதைகளையும் பரிமாறியவர்கள் இப்போ யாருக்கு யார் ஆறுதல் கூறுவதெனத்தெரியாது போய்க்கொண்டிருக்கிறார்கள்.
அந்தவண்டியில் உயிரில்லாதஉடம்புகள்பலஉண்டு.கழுத்தில் தாலி உண்டு.கணவனின் உடம்பிலே உயிரில்லை.
கணவன் ஒருவன் அடிகாயங்களுடன் இறந்தமனைவியின் உடலைக்கட்டிப்பிடித்துக் கதறுகிறான். தெய்வாதீனமாககணவன் உயிருடன் இருக்கிறான். அவன் நல்லநாள் பார்த்துக்கடியதாலி கழுத்தில் இல்லை
குழந்தையைப்பறிகொடுத்த பெற்றோர்,கண்முன்னாலேயே பெற்றோரைப்பறிகொடுத்த பிள்ளைகள்,அண்ணா,தம்பி,தங்கச்சி,அக்கா,என உறவினைகளைப்பறிகொடுத்தவர்கள் கதறுகிறர்கள்.சிலர் கொலைகாரர்களைத்திட்டுகிறார்கள்.சிலர் தங்களை முனிவர்களாக நினைத்து சாபமிடுகிறார்கள்
வட்டிக்குப் பணம்கொடுத்து வட்டிக்குமேல்வட்டியாக ஏழைகளைத்துன்புறுத்தி காணிவேண்டுவதற்காகக்கொண்டுவந்த பணம் எங்கே என்று புலம்புகிறார். வட்டிக்கடைவடிவேல்.பாடுபட்டுசம்பாதித்து தனது ஒரேமகளின் திருமணத்தை சீரும்சிறப்புமாக நடத்தவேண்டும் என்று கொண்டுவந்த பணத்தைப்பறிகொடுத்துத்தவிக்கிறார் பரமசிவம். ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் பணத்தைஜேப்படிசெய்து அதைக்கொள்ளையரிடம் பறிகொடுத்துவிட்டு
"வல்லவனுக்குவல்லவன் வையகத்தில் உண்டு"என்று தனக்குள்சொல்லிக்கொண்டான் மாயவன்.
"என்பணத்தைப்பற்றிக் கவலை இல்லை.ஊரில் உள்ள தனதுமனைவிக்கும் பிள்ளைகளுக்கும் கொடுக்கும்படிதந்தபணம் என்னுடையபெட்டிக்குள் இருந்ததே அதுவும் போய்விட்டதே"என்று அடுத்தவருக்குச்சொல்லித்துயரத்தை வெளியிட்டார் கிளாக்கர் கந்தசாமி..
மிகவும் வேகமாகவண்டிபோய்க்கொண்டிருக்கிறது.ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகப்பேசினார்கள்.'இதற்கு சரியானபாடம் படிப்பிகவேண்டும் "என்றார் ஒருவர்.அனேகமானோர் அதற்கு எதிர்ப்புத்தெரிவித்தார்கள்.
"நமதுபிரதேசத்தைதிவிட்டு நாம் வெளியேபோகக்கூடாது"என்றார் ஒருவர்.
"நமகென்று ஒருநாடிருந்தால் இப்படி நடக்குமா?" எனக்கேட்டார் இன்னொருவர்.அனேகர் அதை ஆமோதித்தனர்.
நமது நாட்டுக்காகப்போராடுவோம் என ஒருமித்தகுரலில் கோஷமிட்டார்கள்.
நடந்தகொடூரங்களைக்கண்ட மெயில்வண்டியும் இனிமேல் தெற்கேபோவதில்லை எனதிடசங்கற்பம் பூண்டது.இப்போவண்டி மிகவேகமாகச்சென்று கொண்டிருக்கிறது.
உயர்ந்தசாதியில் பிறந்து பரம்பரை பரம்பரையாக சாதிக்கொடுமை புரிந்த ஒருவர் "தண்ணீர் தண்ணீர்"எனத்தவித்தார்.அவருக்கு தாழ்ந்தசாதிக்காரன் தண்ணீர்கொடுக்க அமுதமென அதைப்பருகினார். பல உயிர்களைக்கப்பாற்றிய வைத்தியகலாநிதி ஒருவர் தனது உயிரையாராவதுகாப்பாற்றமாட்டார்களா என்று உயிருக்காகப்போராடுகிறார்.
அடுத்தவீட்டு ஊமைக்குழந்தையை அண்டாமல்
ஊமை என்று சிறப்புப்பெயர் சொல்லி விரட்டியவர்
இரண்டு கண்களையிம் இழந்து உலகையே இருட்டாகக்காண்கிறார். ஒருகாலத்தில்தனது பரம்பரைக்கோயிலுக்கு தாழ்ந்த சாதிப்பெண் ஒருத்தி புதுச்சேலை உடுத்துவந்ததைப்பொறுக்கமாட்டாது அவளின் சேலையை உரிந்து தீயிலிட்டவரும் மனைவியும் உடுத்த துணிகளைப்பறி கொடுத்துவிட்டு உள்ளாடைகளுடன் ஒதுங்கி இருக்கிறார்கள்.
வவுனியாவை நெருங்கும்போதுபிரயாணிகளுக்கு மற்றொரு சோதனை ஏற்பட்டது.ரயிலை நோக்கி பெரிய பெரிய கற்கள்வீசப்பட்டன.
அதனாலும் பலர் காயமடைந்தனர்.

அனுராதபுரத்தில் அநியாயத்துக்குட்பட்டரயில் எங்குமேநிற்காமல் ஓடிக்கொண்டிருகிறது.பிரயாணிகளிடையே பெரும்பரபரப்பு. யாழ்ப்பாண ரயில்நிலையத்தில் நிற்குமா இல்லையா எனத்தெரியாமல் அவதிப்பட்டார்கள்.யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் பலர் இறங்கிவிட்டார்கள். இறங்கியவர்களில் அனேகமானோர் பெரியாஸ்பத்திரியை நோக்கிப்போனார்கள்.மீண்டும் ரயில் ஓடத்தொடங்கியது. யாழ்ப்பாண ரயில்நிலையத்தை அடுத்துஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ரயில்நின்றது.
காங்கேசந்துறையில் நின்றதும் எல்லோரும் இறங்கிவிட்டனர்."எல்லோரயும் கொண்டுவந்து சேர்த்துவிட்டேன்" என ரயில் நிம்மதிப்பெருமூச்சுவிட்டது.'படார்" பயங்கரவெடிச்சத்தம்.நின்றவர்கள் அனைவரும் திரும்பியபக்கம் ஓடத்தொடங்கினார்கள்.இனிமேல் தெற்கேபோகமாட்டேன் என்ற ரயிலின் இயந்திரம் எரிந்துகொண்டிருக்கிறது. கொள்ளைக்காரர்கள் வைத்த டைம்பொம் வெடித்ததனால் ஏற்பட்டநெருப்பு பயங்கரமாக எரிந்தது.தீ முற்றாக அணைக்கப்பட்டபோது இயந்திரத்தின் பெரும்பகுதி எரிந்து முற்றாகசாம்பலாகியது.
யாழ்ப்பாணம் எங்குமே சோகமயம்.மூன்றுமாதங்களில் எல்லாம் அமைதியாகிவிட்டது.காங்கேசந்துறையில் இருந்து தெற்குநோகிப்போவதற்கு ஒருரயில் தயாராகநிற்கிறது.
பிரயாணிகள் முண்டியடித்து ஏறினார்கள்.இனிமேல் தெற்கேபோகமாட்டோம் என்று சூளுரைத்தபலர் கோணர் சீற் தேடி அலைந்தார்கள்.அவர்களை வடக்கேகொண்டுவந்த ரயிலின் இயந்திரம் அவர்களைப்பார்த்து சிரித்தது.யாரும் அதைக்கவனிப்பதாகத்தெரியவில்லை.பேரிரைச்சலுடன் ரயில்தெற்குநோக்கிப்புறப்பட்டது. அவர்கள் ஓடிவரும் நாளை எதிர்பார்த்துவடக்கேவந்தரயில் நிற்கிறது.

சூரன்.ஏ.ரவிவர்மா
சுடர்
வைகாசி-1979

Sunday, April 5, 2009

பந்திக்கு முந்திய ராமதாஸ்அந்தரத்தில் தவித்த வைகோ



அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஐக்கியமான பாட்டாளி மக்கள் கட்சி தான் விரும்பிய தொகுதிகளை கேட்டுப் பெற்றுக் கொண்டதனால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் மனமுடைந்து போயுள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி மதில் மேல் பூனையாகக் காத்திருக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கிறது என்று செய்திகள் வெளியான போதெல்லாம் அதனை மறுத்து அறிக்கை விட்டார் டாக்டர் ராமதாஸ்.
அரசியல் அவதானிகள் எதிர்பார்த்தது போன்று ஜெயலலிதாவைச் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியையும் தன் பக்கம் இழுப்பதற்கு ஜெயலலிதா முயற்சி செய்தார். அதன் காரணமாக டாக்டர் ராமதாஸைச் சந்திப்பதை தவிர்த்தவர்கள் காங்கிரஸை திராவிட முன்னேற்றக் கழக அணியிலிருந்து பிரிக்க முடியாது என்று உணர்ந்த ஜெயலலிதா டாக்டர் ராமதாஸைச் சந்திப்பதற்கு பச்சைக் கொடி காட்டினார்.
ஜெயலலிதா குறிப்பிட்ட நல்ல நாளில் டாக்டர் ராமதாஸ் போயஸ் கார்டன் சென்று சந்தித்தார். எட்டு வருடத்தின் பின்னர் இருவரும் சிரித்தவாறு புகைப்படங்களுக்கு காட்சியளித்தனர். முன்னர் நடைபெற்ற கசப்பான அனுபவங்களை இருவரும் மறந்து விட்டனர். ஆனால் பத்திரிகைகள் அவற்றை மறக்காது அவ்வப்போது தமது கட்டுரைகளில் குறிப்பிட்டு வருகின்றன.
ஜெயலலிதாவும் டாக்டர் ராமதாஸும் சந்தித்து ஒருசில மணித்தியாலங்களுக்குள் தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டு விட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 23 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி ஏழு தொகுதிகளிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நான்கு தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் மார்க்ஸிஸ்ட் கட்சி மூன்று தொகுதிகளிலும் போட்டியிடும் என்று ஜெயலலிதா அறிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் மேல் சபைக்குத் தெரிவாவார் என்றும் உடன்பாடு எட்டப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை வைகோவால் ஜீரணிக்க முடியவில்லை. ஜெயலலிதாவுக்காக மத்திய அரசையும் தமிழக அரசையும் கண்டித்து உரையாற்றும் வைகோவுக்கு நான்கு தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆறு தொகுதிகளை வைகோ எதிர்பார்த்தார். இரண்டு தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் வைகோ இருந்தபோது சட்டமன்றத் தேர்தலில் கோரியதை விட ஒரு தொகுதி குறைக்கப்பட்டதனால் அணிமாறி ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தார் வைகோ. மத்திய அரசில் ஐந்து வருடங்கள் அமைச்சுப் பதவியை அனுபவித்து விட்டு தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தோற்றுவிடும் என்று கருதி அணி மாறிய டாக்டர் ராமதாஸுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வைகோவுக்கு ஜெயலலிதா கொடுக்கவில்லை.
வைகோவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான இரண்டாம் கட்டத் தலைவர்கள் அவரைக் கைவிட்டு தமது தாய்க் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்ததனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதாவும் வைகோவை ஒதுக்குவதை அவரது ஆதரவாளர்களினால் தாங்கிக் கொள்ள முடியாதுள்ளது.
வைகோவின் அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் டாக்டர் ராமதாஸுக்கும் இல்லை. ஆனால் அணி அவருக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை வைகோவுக்கு யாரும் கொடுப்பதில்லை.
எட்டு வருடங்களின் முன்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்தபோது தனக்குரிய தொகுதிகளை முதலில் பேசித் தீர்த்தவர் டாக்டர் ராமதாஸ். இப்போதும் ஜெயலலிதாவைச் சந்தித்து ஒரு சில மணித்தியாலயத்தினுள் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது.
உண்மையிலேயே இரகசியப் பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டபின்பே ஜெயலலிதாவும் டாக்டர் ராமதாஸும் சந்தித்து தமது முடிவை அறிவித்தனர். பாட்டாளி மக்கள்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் காங்கிரஸ் கட்சியை அது எதிர்த்துப் போட்டியிடுகிறது. ஏனைய ஆறு தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தினை எதிர்த்தே பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கட்சியுடன் மோதுவதை கூடுமானவரை பாட்டாளி மக்கள்கட்சி தவிர்த்துள்ளது. புதுச்சேரி, காங்கிரஸ் கட்சியின் கோட்டை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியிடமிருந்து புதுச்சேரியை பாட்டாளி மக்கள் கட்சிக்கும் பெற்றுக் கொடுத்தார் கருணாநிதி.
இதன் காரணமாக காங்கிரஸுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இடையே சில விரிசல்கள் ஏற்பட்டன. அதையெல்லாம் பொருட்படுத்தாது புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியை வெற்றி பெற வைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். இந்த முறையும் புதுச்சேரியை டாக்டர் ராமதாஸ் கேட்டுப் பெற்றுள்ளார். புதுச்சேரியை பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி செய்ய வேண்டும் என்ற அடங்காத ஆசை டாக்டர் ராமதாஸிடம் உள்ளது. அதன் எதிரொலியாகத் தான் புதுச்சேரியை மீண்டும் பெற்றுள்ளார்.
ஆனால் இந்த முறை புதுச்சேரியில் வெற்றி பெறுவதென்பது முடியாத காரியம். பாட்டாளி மக்கள் கட்சி போட்டியாளரை தோற்கடிப்பதற்காக காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமும் கைகோர்த்துள்ளன. சிதம்பரம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரத்தில் திருமாவளவன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாக்டர் ராமதாஸுக்கும் திருமாவளவனுக்கு இடையேயான உறவு மிகவும் இறுக்கமானது. இவர்கள் இருவரும் வேறு வேறு அணியில் இருந்தாலும் கொள்கைக்காக ஒரே மேடையில் ஏறி குரல் கொடுப்பார்கள். ஆனால் சிதம்பரத்தில் இருவரும் எதிரும் புதிருமாக பிரசாரம் செய்யப் போகிறார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளரான காடுவெட்டி குருவை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது. டாக்டர் ராமதாஸின் நம்பிக்கைக்குப் பாத்திரமான காடு வெட்டி குருவை தோல்வியடையச் செய்வதன் மூலம் டாக்டர் ராமதாஸை அவமானப்படுத்தலாம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.
தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் எதிரான வாக்குகளை விஜயகாந்த் கவர உள்ளதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாதுள்ளது.
விஜயகாந்த் தனித்துப் போட்டியிடுவதால் வாக்குகளைப் பிரிக்க முடியுமே தவிர ஒரு தொகுதியில் கூட விஜயகாந்தின் வேட்பாளர் வெற்றி பெற முடியாது. கட்சிகளினதும் வேட்பாளரினதும் செல்வாக்குத்தான் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.
விஜயகாந்துக்கு 12 சதவீத வாக்குகளே கிடைக்கும் என்று கருத்துத் கணிப்பில் தெரியவந்துள்ளது. 12 சதவீத வாக்குகளால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு 39 சதவீத வாக்குகளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணிக்கு 39 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று என்.டி.பி. தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு கூறுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி 20 முதல் 22 இடங்களிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி 18 முதல் 20 இடங்களிலும் வெற்றி பெறும் என்று அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. வேட்பாளர் தெரிவும் இறுதி நேரப் பிரசாரமும் இந்தக் கருத்துக் கணிப்பைப் பொய்யாக்கி விடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
வர்மா
வீரகேரசரி 05/04/2009

Friday, April 3, 2009

திரைக்குவராதசங்கதி 7


தமிழ்த் திரை உலகை தனது வசியத்தால் கட்டி வைத்திருந்தவர் ரி.ஆர். ராஜகுகுமாரி, திரைப்படங்களில் நடிப்பவர்களைக் காண்பதற்கு இன்று ரசிகர்பட்டாளம் காத்துக் கிடப்பதைப் போன்றே அன்றைய ரசிர்களும் காத்திருந்தார்கள். தனது அபிமான நடிகையான எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை பார்ப்பதற்கு கடற்கரைக்கு சென்று வந்தார் ரி.ஆர். ராஜகுமாரி.
தியாக பூமி படத்தைப் பார்த்து பரவசமடைந்த ரி.ஆர். ராஜகுமாரி தனது தம்பியுடன் மெரீனா கடற்கரைக்குச் சென்று எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை காண தவமிருந்தார். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியும் இயக்குநர் கே. சுப்பிரமணியமும் திறந்த காரில் செல்லும்போது தூரத்தில் நின்று பார்த்து ரசித்த ரி.ஆர்.ராஜகுமாரி நானும் ஒருநாள் நடிகையாவேன். என்னைப் பார்ப்பத
ற்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தவமிருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கவில்லை.
குமார குலோத்துங்கன் என்ற படத்தில் நடிப்பதற்கு ரி.ஆர். ராஜகுமாரி தெரிவு செய்யப்பட்டபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ராஜலட்சுமி என்பதே ரி.ஆர். ராஜகுமாரியின் நிஜப் பெயர். ராஜாயி என்றும் அழைப்பார்கள். டி.பி. ராஜலட்சுமி எனும் நடிகை பிரபலமாகயிருந்தபோது டி.வி. ராஜலட்சுமி என்ற பெயரில் இன்னொரு நடிகை பிரபலமாக இருந்தார். பெயர் குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக டி.ஆர். ராஜலக்ஷ்மி எனும் பெயரை ராஜகுமாரி என்று மாற்றினார் தயாரிப்பாளர் ராதா ராவ்
ராஜலக்ஷ்மி எனும் பெயர் மறைந்து ரி.ஆர். ராஜகுமாரி எனும் பெயர் பிரபலமாகியது.
எம்.கே. தியாகராஜ பாகவதர் பி.யூ. சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருடன் நடித்து தனது நடிப்பாற்றலால் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்தியவர் ரி.ஆர். ராஜகுமாரி.
ரி.ஆர். ராஜகுமாரி முதன் முதலாக நடித்த குமார குலோத்துங்கன் வெளிவரவில்லை. ரி.ஆர். ராஜகுமாரி நடித்த கச்சதேவயானி வெளியாகி அவருக்கு பெரும் மதிப்பை தேடிக் கொடுத்தது. கே. சுப்பிரமணியம் இயக்கிய இப்படத்தில் கொத்தமங்கலம் சீனுவும் கொத்தமங்கலம் சுப்புவும் ரி.ஆர். ராஜகுமாரியுடன் நடித்தார்கள். அதன் பின்னர் வெளியான சூரிய புத்திரி, மந்திரவாதி ஆகிய படங்களும் ரி.ஆர். ராஜகுமாரிக்கு புகழைத் தேடிக் கொடுத்தன.
எம்.கே. தியாகராஜ பாகவதரின் பிரமாண்டமான வெற்றிப் படமான ஹரிதாஸ், சிவகவி ஆகியவற்றில் டி. ஆர். ராஜகுமாரி நடித்தார்.எம்.கே. தியாகராஜ பாகவதருடன் போட்டிபோட்டு நடித்த பி.யூ. சின்னப்பாவுடனும் ரி.ஆர். ராஜகுமாரி நடித்தார். மனோன்மணி, கிருஷ்ணபக்தி ஆகியவற்றில் பி.யூ. சின்னப்பாவுடன் ரி.ஆர். ராஜகுமாரி நடித்தார்.
எம்.கே. தியாகராஜ பாகவதர் நடிப்பிலும் பாட்டிலும் புகழ்பெற்று விளங்கினார். பியூ. சின்னப்பா வசனம், கத்திச் சண்டை, சிலம்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்.
எம்.கே. தியாகராஜ பாகவதர் பியூ. சின்னப்பா ஆகிய இரு பெரும் நடிகர்களுடன் நடித்த ரி.ஆர்.ராஜகுமாரி மக்கள் திலகம் எம். ஜி.ஆர்., நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ஆகியோருடனும் நடித்துள்ளார்.
எம்.ஜி. ஆரின் "புதுமைப் பித்தன்' ரி.ஆர். ராஜகுமாரிக்கு புகழைத் தேடிக் கொடுத்த படங்களில் ஒன்று.
தமிழ் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்திய படங்களில் ஒன்றான மனோகராவில் சிவாஜி கண்ணம்பா ஆகியோருடன் போட்டி போட்டு நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.
நடிப்பு, நாட்டியம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய ரி.ஆர். ராஜகுமாரியை அகில இந்திய நட்சத்திரமாக ஜொலிக்கச் செய்தவர் ஜெமினி ஸ்ரூடியோ நிறுவுனர் எஸ்.எஸ்.வாசன் தமிழிலும் ஹிந்தியிலும் புரட்சியை ஏற்படுத்திய சந்திரலேகாவில் ரி.ஆர். ராஜகுமாரியின் நடிப்பை புகழ்ந்தவர்களே இல்லை.
தமிழ்த்திரை உலகின் பொற்காலம் என்று தான் நடித்த காலத்தை பெருமையுடன் கூறுகிறார் ரி.ஆர். ராஜகுமாரி.
அப்பொழுதெல்லாம் படப்பிடிப்புக்கு போய் வருவதென்பது கிட்டதட்ட பள்ளிக்கூடம் போய் வருவது போலத்தான். காலையில் ஒன்பது மணிக்குக் கிளம்பினால் மாலையில் தான் வீடு திரும்புவேன். எல்லாக் கம்பனிகளிலும் ஒரே குடும்பத்தினர் போன்றுதான் பழகுவோம். டைரக்டர், நடிகர், வசனகர்த்தா, கமேராக்காரர்கள், லைட் போய் என்ற பாகுபாடே கிடையாது. சாப்பாட்டின் போது டைரக்டர் சுப்பிரமணியத்தின் அருகில் லைட்போய் உட்கார்ந்து சாப்பிடுவார். அந்தளவுக்கு சமத்துவம் வழங்கப்பட்ட பொற்காலம் அது என்று தனது திரைப்பட அனுபவத்தைக் கூறுகிறார் ரி.ஆர். ராஜகுமாரி.
ரமணி
மித்திரன் 03/04/2009